Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்னை தமிழகத்தின் ஆண் தெரசாக்கள்! பசியில்லா தேசம் படைக்கும் இளைஞர்கள்! அந்த மனசு தான் சார் கடவுள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர்கள் பசியில்லா நத்தம் என்ற அமைப்பை உருவாக்கி ஆதரவற்றவர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருவதோடு, அலங்கோலமாக உள்ள நபர்களை நல்ல மனிதனாக்கி மக்கள் மத்தியில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவாக இருந்தாலும் ஆண்டிபட்டியாக இருந்தாலும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவற்றோரும் அரவணைக்க யாரும் இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு வறுமையின் பிடியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

ஆனாலும் எங்கோ ஒரு மூலையில் அவர்களை அரவணைக்க ஒவ்வொரு நாளும் அன்னை தெரசாக்கள் தோன்றி கொண்டு தான் இருக்கிறார்கள்.அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பசியில்லா நத்தம் என்ற அமைப்பை ஆரம்பித்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்குவதோடு ஆதரவற்றவர்களுக்கு வீடுகளும் கட்டிக் கொடுத்து வருகின்றனர்.

பசியில்லா நத்தம் இளைஞர்கள்

பசியில்லா நத்தம் இளைஞர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மதுசூதணன், தனது நண்பர்களுடன் இணைந்து பசியில்லா நத்தம் என்ற அமைப்பைத் தொடங்கி கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இவர்கள் நத்தம், கோபால்பட்டி, திண்டுக்கல் பகுதிகளில் வாரிசுகளால் கைவிடப்பட்ட முதியவர்கள், நோய் வாய்ப்பட்டோர், மனநலம் பாதிக்கப்பட்டோரை அடையாளம் கண்டு கணக்கெடுத்தனர்.

ஆதரவற்றவர்களுக்கு உதவி

ஆதரவற்றவர்களுக்கு உதவி

இதைத் தொடர்ந்து தினமும் 30 முதல் 40 பேருக்கு உணவு பாக்கெட்கள், தண்ணீர் கேன்களை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று வழங்கி வருகின்றனர். இந்த சேவையை கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக மேலாக, இயலாதோருக்கு உதவிடும் லட்சியமாக செய்கின்றனர்.

மனநலம் குன்றிய மக்கள்

மனநலம் குன்றிய மக்கள்

மனநலம் குன்றி ஆண்டுக்கணக்கில் குளிக்காமல், முடி வெட்டாமல் பராமரிப்பின்றி அலங்கோலமாக இருப்போரையும் குளிக்க வைத்து, தலைமுடி வெட்டி, முகச்சவரம் செய்து நல்ல உடை, போர்வை, காலணி போன்றவற்றை வழங்கி உதவுகின்றனர்.

மக்கள் பாராட்டு

மக்கள் பாராட்டு

இந்த சேவையை 'பசியில்லா நத்தம்' என்ற முகநுால் மற்றும் வாட்ஸப் பக்கத்தில் பதிவிடுவதால், அதை பார்க்கும் பலரும் இவர்களை தொடர்பு கொண்டு பொருள், உடைகள் தந்து உதவுகின்றனர். இவர்களது குடும்பத்தினரும் இப்பணிக்கு ஆதரவுக்கரம் தருவதால் இயலாதவர்களுக்கான சேவை தொய்வின்றி நடக்கிறது. சாதாரண மனநிலையில் இருப்பவர்கள் சுயமாக சம்பாதித்து தன் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பிச்சை எடுப்பவர் அதன் மூலம் தனது வயிற்றுப்பசியை போக்கி கொள்வர். ஆனால் மனநலம் குன்றியவருக்கு பிச்சை எடுக்கக்கூட தெரிவதில்லை.

10 ரூபாய்க்கு உணவு

10 ரூபாய்க்கு உணவு

இதனைக் கண்டு வேதனையடைந்து தான் இவர்கள் இந்த சேவையை தொடங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு சொந்த இடத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு நல்லுள்ளம் கொண்டோரின் உதவிகள் மூலம் வீடுகள் கட்டித் தருகின்றனர்.

மக்களின் கடமை

மக்களின் கடமை

மேலும் திண்டுக்கல் நத்தம் உள்ளிட்ட பகுதிகளை ஐந்து ரூபாய், பத்து ரூபாய் உணவகங்கள் ஆரம்பித்து ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கியும் வருகின்றனர் இவர்களின் சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகளை வழங்கி வந்தாலும் அதனை ஏற்காமல் மக்கள் சேவையே பெரிய விருது என பணியாற்றி வரும் இந்த இளைஞர்களை பாராட்ட வேண்டியது அனைவரின் கடமை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+