இதய பிரச்சனையால்.. உயிருக்கு போராடும் ஒன்றரை வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுவன் லத்திக், பிறந்தது முதல் இதய பிரச்சனையால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறான். தற்போது சிறுவனின் நிலை மோசமடைந்திருக்கிறது. உயிருக்கா தற்போது சிறுவன் போராடி வருகிறான். நீங்கள் நினைத்தால் இந்த பிஞ்சு உயிரை காப்பாற்ற முடியும்.
சிறுவன் லத்திக் ஒரு மாதக் குழந்தையாக இருந்தபோது, கடும் காய்ச்சல், தீவிர வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டான். உள்ளூர் கிளினிக்கில் வைத்து சிகிச்சை அளித்து பார்த்திருக்கிறார்கள் பெற்றோர். ஆனால், சிகிச்சை பலனளிக்கவில்லை. பின்னர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் சிறுவனுக்கு இதயத்தில் தீவிரப் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பின், லத்திக்குக்கு 'டெட்ரலஜி ஆஃப் ஃபாலோட்' எனும் இதயக் குறைபாடு உறுதி செய்யப்பட்டு, சென்னைக்குச் சென்று மேல் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது.
குழப்பத்திற்கும், பயத்திற்கும் மத்தியில், ஒரு குடும்ப நண்பரின் வழிகாட்டுதலுடன் பெற்றோர், சென்னை MIOT மருத்துவமனையை அடைந்தனர். அங்கிருந்த குழந்தை இருதய சிகிச்சை நிபுணர்கள், லத்திக்குக்கு உடனடியாக உள் இதய அறுவை சிகிச்சை (intracardiac repair surgery) தேவை என்று கூறியுள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சைதான் லத்திக் உயிர் பிழைக்க இருக்கும் ஒரே வாய்ப்பு. இது செய்யப்படாவிட்டால், சிறுவனின் இதயம் கொஞ்சம், கொஞ்சமாக பலவீனமடைந்து, உயிர் பிழைப்பது கஷ்டமாகிவிடும். ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ. 3,50,000 செலவாகும். இந்த தொகை சிறுவனின் பெற்றோருக்கு மிகப்பெரியது. அவர்களால் தனியாக இந்த தொகையை திரட்ட முடியாது.

சிறுவனின் தந்தை சிவகுரு, சூப்பர் மார்க்கெட்டில் மாதம் ரூ. 15,000 சம்பாத்தியத்திற்கு வேலைக்கு சென்றுக்கொண்டிருக்கிறார். மொத்த குடும்பத்திற்கும் இந்த சொற்ப வருமானம்தான் இருக்கிறது. இதை வைத்து குடும்பத்தின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே அவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே அறுவை சிகிச்சைக்கான தொகையை ஏற்பாடு செய்ய இயலாமல், குடும்பம் மனதளவில் மிகவும் நொறுங்கி போய் உள்ளது. சிறுவன் வலியால் துடிப்பதைக் காணும் அவர்கள், நம்மை போன்றவர்கள் யாரேனும் உதவுவோம் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த குடும்பத்துடன் நாம் துணை நிற்போம். நம் ஒவ்வொருவரின்பங்களிப்பு, சிறு தொகையாக இருந்தாலும், சிறுவனின் உயிரை காப்பாற்றும். சிறுவன் வளரவும், விளையாடவும், பள்ளிக்குச் செல்லவும், அவனுக்கான வாழ்க்கையை அவன் வாழவும் ஒரு பொன்னான வாய்ப்பை நம்மால் உருவாக்க முடியும். ஒன்றிணைவோம், சிறுவனின் உயிரை காப்பாற்றி அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எனும் விளக்கை ஏற்றுவோம். அதற்காக நம்மால் முடிந்த உதவியை இன்றே செய்வோம்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications