Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலரே குறிஞ்சி மலரே! முதலமைச்சருக்கு திண்டுக்கல் கலெக்டர் அளித்த ஓவியம்! ருசிகர பின்னணி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குறிஞ்சி மலர் ஓவியம் ஒன்றை நினைவுப்பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.

Recommended Video

    முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குறிஞ்சி மலர் ஓவியத்தை நினைவுப்பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.

    சரி இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது எனக் கேட்கத் தோன்றுகிறதா. ஆம் இந்த நினைவுச்சின்னத்தை பொறுத்தவரை பல்வேறு ருசிகர பின்னணி தகவல்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர் குறிஞ்சி மலர் என்றாலும் கூட முதல்வர் ஸ்டாலின் முதன்முதலில் நடித்த சின்னத்திரை தொடரின் பெயரும் குறிஞ்சி மலர் தான். இதனால் குறிஞ்சி மலர் என்பது முதல்வரின் நீங்காத நினைவுகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

     திண்டுக்கல் பயணம்

    திண்டுக்கல் பயணம்

    முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்து அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை புறப்படுவதற்கு முன்னர் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் குறிஞ்சி மலர் ஓவியம் ஒன்று நினைவுப்பரிசாக முதல்வருக்கு வழங்கப்பட்டது.

    முதல்வர் மகிழ்ச்சி

    முதல்வர் மகிழ்ச்சி

    தனக்கு கொடுக்கப்பட்ட குறிஞ்சி மலர் ஓவியத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி கொண்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. இதனிடையே குறிஞ்சி மலர் ஓவியம் கொடுக்கப்பட்டதில் அப்படி என்ன ருசிகரம் இருக்கிறது என நீங்கள் வினவுவது புரிகிறது. அதவாது அந்தக் காலத்தில் மக்கள் மத்தியில் தமது முகத்தை பதிய வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நடித்த முதல் தொலைக்காட்சி நாடகத்தின் பெயரும் குறிஞ்சி மலர் தான்.

    குறிஞ்சி மலர்

    குறிஞ்சி மலர்

    இதனால் குறிஞ்சி மலர் என்பதை பொறுத்தவரை முதல்வரால் எந்நாளும் மறக்க முடியாத ஒன்றாகும். அத்தகைய குறிஞ்சி மலர் ஓவியத்தை முதலமைச்சருக்கு கொடுத்து அசத்தியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர். கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூத்துக் குலுங்கக் கூடிய மலர் குறிஞ்சி மலர்.

    சங்ககால இலக்கியங்கள்

    சங்ககால இலக்கியங்கள்

    இதனிடையே சங்ககால இலக்கியங்கள் பலவற்றிலும் குறிஞ்சி மலர் குறித்து குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக குறிஞ்சி மலர் செடிகள் அருகி வருவதும் கவனிக்கத்தக்கது. தோட்டக்கலைத்துறையோ வனத்துறையோ இது தொடர்பாக கவனத்தில் கொண்டு அருகி வரும் குறிஞ்சி பூ செடிகளை மீண்டும் தழைத்தோங்க செய்ய வேண்டியது அவசியமாகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+