Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'இவங்கள தூக்கிட்டு.. அவங்கள கொண்டு வாங்க.. அதுதான் அணியை காப்பாற்ற ஒரே வழி.. 'கபில் தேவ் ஓப்பன் டாக்

Subscribe to Oneindia Tamil

துபாய்: டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் மோசமான பர்ஃபாமன்சிற்கு வணிக ரீதியில் அதிக அளவிலான போட்டிகள் நடைபெறுவது, குறிப்பாக ஐபிஎல் தொடரே முக்கிய காரணம் எனப் பலரும் சாடியுள்ளனர். இந்தச் சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இந்திய அணி குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி20 உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டிற்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த அக். 23ஆம் தேதி முதல் சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பெரும் எதிர்பார்ப்புடன் இந்த உலகக் கோப்பை தொடரில் களமிறங்கியது

 டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை

இதற்காக பலம் வாய்ந்த இந்திய அணி தேர்ந்தெடுக்கப்பட்டது. போதாக்குறைக்குத் தல தோனியும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். மேலும், விராட் கோலியும் இதுதான் டி20 தான் கேப்டனாக இருக்கும் கடைசி தொடர் என அறிவித்துவிட்டார். இதனால் இந்திய அணியின் மீது வழக்கமான எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை கடந்த அக். 14ஆம் தேதி எதிர்கொண்டது.

 பாகிஸ்தானிடம் தோல்வி

பாகிஸ்தானிடம் தோல்வி

இதில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை குவித்தது. இந்திய அணியில் எந்த வீரரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை. அடுத்துக் களமிறங்கிய பாகிஸ்தான் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் மிக எளிதாக 152 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்பது இதுவே முதல் முறையாகும்.

 நியூசிலாந்து போட்டி

நியூசிலாந்து போட்டி

இந்தச் சூழலில் கடந்த அக். 31ஆம் தேதி நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. இந்த போட்டியிலும் கேப்டன் விராட் கோலி வழக்கம் போல டாஸ் வெல்லத் தவறினார். நியூசிலாந்து அணியின் அட்டகாசமான பவுலிங்கில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குறிப்பாக 7ஆவது ஓவரில் தொடங்கி 16ஆவது ஓவர் வரை இந்தியாவில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை.

படுமோசம்

படுமோசம்

நியூசிலாந்தின் இந்த சூப்பர் பவுலிங் இந்தியாவின் ரன் ரேட்டை அப்படியே குறைத்தது. கடைசி ஓவர்களிலும் கூட இந்தியாவால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவால் 110 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து வந்த நியூசிலாந்து வீரர்கள் இந்திய பவுலிங்கை வெளுத்து வாங்கினர். வெறும் 15 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து நியூசிலாந்து அணி 111 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

 அரையிறுதி போட்டி

அரையிறுதி போட்டி

தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்றதன் மூலம் இந்தியா கிட்டதட்ட அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை முற்றிலுமாக இழந்துவிட்டது என்றே சொல்லலாம். அடுத்து வரும் போட்டிகளில் இந்தியா மிகப் பெரியளவில் வென்று, மற்ற போட்டிகளின் முடிவுகளும் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தால் மட்டுமே இந்தியாவால் அடுத்து சுற்றைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியும். இந்தச் சூழலில் தான் இந்தியா அட்டகாசமான பார்மில் இருக்கும் ஆப்கன் அணியை இன்று எதிர்கொள்கிறது.

 என்ன காரணம்

என்ன காரணம்

அதேநேரம் இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக, வருவாயை மட்டும் குறியாக வைத்து, குறைந்த இடைவெளியில் அதிகளவிலான போட்டிகள் நடத்தப்படுவதால் வீரர்கள் ஓய்வின்றி விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகப் பலரும் விமர்சித்துள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் மோசமான பர்ஃபாமன்சிற்கு ஐபிஎல் தொடரே முக்கிய காரணம் எனப் பலரும் சாடியுள்ளனர். இந்தச் சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இந்திய அணி குறித்து முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

 கபில் தேவ் கருத்து

கபில் தேவ் கருத்து

மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலை இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், முக்கிய வீரர்களால் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாவிட்டால், இளம் வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மற்ற அணிகளின் முடிவுகளை இந்தியா சார்ந்திருக்க வேண்டிய நிலை எப்போதும் இருக்கக் கூடாது. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் அது நமது பலத்தால் இருக்க வேண்டும். மற்ற அணிகளை நம்பாமல் இருப்பது நல்லது.

 முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

இந்தியா அணியில் முக்கிய வீரர்களின் எதிர்காலம் குறித்து அணியின் தேர்வாளர்கள் முடிவு எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த தலைமுறையைத் தயார் செய்யும் பணிகளில் நாம் இறங்க வேண்டும். இளம் வீரர்களை கொண்ட அணி தோற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் அனுபவத்தைப் பெறுவார்கள்.

 ஒரே வழி

ஒரே வழி

ஆனால் இப்போது அணியில் பல முக்கிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் அவர்கள் மோசமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தினால், இப்படி தான் கடும் விமர்சனங்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். பிசிசிஐ இதில் தலையிட்டு அணிக்குள் இளைஞர்களை அதிகம் கொண்டு வருவது குறித்துச் சிந்திக்க வேண்டும்" என்றார். ஏற்கனவே, அணியில் விராட் கோலிக்கு ஆதரவாகவும் எதிராகவும் 2 குழுக்கள் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கபில் தேவ்வின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆப்கானை எதிர்கொள்கிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+