Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்படியொரு வரவேற்பா? குஷியில் திக்குமுக்காடிய பிரேமலதா விஜயகாந்த்! மாஜி எம்.எல்.ஏ.வுக்கு ஷாக்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு ஈரோட்டில் கிடைத்த உற்சாக வரவேற்பு அவரை திக்குமுக்காட வைத்துவிட்டதாம்.

தேமுதிக பொருளாளராக இருந்து திமுகவுக்கு தாவிய மாஜி எம்.எல்.ஏ. சந்திரக்குமாரின் சொந்த ஊரான ஈரோட்டில், இப்படியொரு வரவேற்பு தனக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லையாம்.

இதனிடையே வெளியூர் உட்பட எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் தனது சிவப்பு நிற போர்டு எண்டேவர் காரில் தான் பிரேமலதா பயணிப்பார். ஆனால் நேற்று ஈரோடு சென்ற அவர் வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

நூல் விலை

நூல் விலை

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்ற தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தை கோவை விமான நிலையத்தில் இருந்தே நிர்வாகிகள் கார்களில் அணிவகுத்து அழைத்துச் சென்றனர். சென்னை உட்பட வெளியூர்களில் எந்த நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் செண்டிமெண்டாக தனது சிவப்பு நிற போர்டு எண்டேவர் காரில் தான் பிரேமலதா பயணிப்பார்.

ஃபோர்டு கார்

ஃபோர்டு கார்

அண்மைக்காலமாக இப்போது அந்தக் காரை அவரது மகன் விஜய பிரபாகரன் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகிறார். அப்படி என்ன செண்டிமெண்ட் அந்தக் காரில் இருக்கிறது எனத் தெரியவில்லை. இதனிடையே நேற்று வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் மாறி பயணித்தார் பிரேமலதா. இதனிடையே சந்திரக்குமார் திமுகவுக்கு தாவியதற்கு பிறகு ஈரோடுக்கு செல்வதை பிரேமலதா விஜயகாந்த் பெரும்பாலும் குறைத்திருந்தார்.

சந்திரக்குமார் ஊர்

சந்திரக்குமார் ஊர்

காரணம் தேமுதிக பொருளாளராக இருந்து திமுகவில் இணைந்த போது தன்னுடன் பெரும்பாலான நிர்வாகிகளை சந்திரக்குமார் அழைத்துச் சென்றதேயாகும். இந்தச் சூழலில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்கச் சென்ற பிரேமலதா விஜயகாந்துக்கு ஈரோட்டில் மிக உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அவரது காரின் முகப்பு கண்ணாடியில் மலர்களை தூவி சில கிலோமீட்டர் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜப்பான் கதை

ஜப்பான் கதை

இந்தக் காட்சிகளையெல்லாம் கண்ட பிரேமலதா விஜயகாந்த் மகிழ்ச்சியில் திகைத்துப் போனார். அதே உற்சாகத்துடன் மேடையேறிய அவர், ஜப்பான் நாட்டு கதையெல்லாம் கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதனிடையே மாதம்தோறும் இனி சுற்றுப்பயணம் செய்வது பற்றியும் அவர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+