வடமாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு...சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல்..ஈரோட்டில் பரபரப்பு
ஈரோடு: தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனத்தில் பல ஆண்டுகாலமாக பணியாற்றிய உள்ளூர் தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்து விட்டு வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் ஆயிரக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு அசோகபுரம் பவானி சாலையில் தனியார் போக்குவரத்து பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஜவுளி மஞ்சள் மற்றும் இன்ஜினியரிங் தோல் தொழில் மற்றும் பனியன் ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த பார்சல் வெளி ஊர்களுக்கும் மாநிலங்களுக்கும் வெளிநாட்டிற்கும் அனுப்பி வைக்கும் வகையில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இதையொட்டி நிறுவனத்தில் ஈரோட்டில் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7000க்கும் மேற்பட்டோர்களை உள்ளடக்கிய தொழிற்சங்க தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறுவனத்தின் பணியினை அவர்களுக்குள்ளாகவே மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே ஈரோட்டைச் சேர்ந்த தொழிற்சங்க தொழிலாளர்களது ஒப்புதல் ஏதுமின்றி இந்நிறுவனத்தைச் சேர்ந்தோர் வடமாநில தொழிலாளர்களை பணியில் வைத்துக் கொண்டு பார்சல் சர்வீஸ் நடத்தி வந்துள்ளனர் .
இதையடுத்து நிறுவனத்தின் செயல்பாட்டால் ஆத்திரமடைந்த ஈரோட்டில் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7000க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து ஈரோடு பவானி பிரதான சாலையின் முன்பு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இனி அடுத்து இது குறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட ஈரோட்டில் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய தொழிலாளர்கள், ஈரோட்டை சேர்ந்த ஏ ஆர் எல் என்ற இந்த லாரி ஆபீஸ் நிறுவனத்தில் ஈரோட்டை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் தொழிற்சங்கங்களின் பேச்சு வார்த்தை அடிப்படையில் நிறுவனத்தில் பார்சல்களை லாரிகளில் ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், இதில் நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையொட்டி இந்நிறுவனத்தின் தங்களுக்கு வழங்க வேண்டிய போனஸ் தொகையை பேச்சுவார்த்தை அடிப்படையில் உயர்த்தி வழங்குவதாக உறுதி அளித்தனர்.
தீபாவளி முடிந்த நிலையில் தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தைக்கு உரிய பதில் கூறாமல் தங்கள் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கி வந்த பணிகளை தொழிற்சங்கங்களிடம் எந்தவித ஒப்புதலும் பெறாமல் இந்நிறுவனத்தின் தன்னிச்சையாக வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணி வழங்கியுள்ளதை கண்டித்து தற்பொழுது சாலை மறியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர் .
இதன் பின்னர் காவல்துறையினர் ஏ ஆர் எல் லாரி ஆபீஸ் நிறுவனத்திடம் இது குறித்து கேட்ட நிலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு கிடைக்கும் வரை எந்த பணியும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்தனர். மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க தொழிலாளர்களிடமும் தனியார் லாரி ஆபீஸ் நிறுவனத்தினரிடமும் உரிய பேச்சுவார்த்தை நடத்திய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் லாரி ஆபீஸ் முன்பு குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும், வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிய எதிர்ப்பு தெரிவித்து திடீரென பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது, தொழிலாளி ஒருவர் மீது தனியார் நிறுவன அதிகாரியின் இருசக்கர வாகனம் மோதியதால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அந்த அதிகாரியை சரமாரியாக தாக்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார், தொழிலாளர்களை சமாதானப்படுத்தி அதிகாரியை மீட்டனர்.
தொடர்ந்து, போக்குவரத்து பார்சல் நிறுவன அதிகாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
-
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம் -
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications