ஈரோடு பாம்பு சம்பவம் தெரியுமா? அந்த ஒரு நிமிடம் செய்த காரியம்! பண்ணை வீட்டு நாய் வைரல் வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே, சமூக வலைதளத்தில் வைரலாக வேண்டும் என்ற நோக்கில் வன உயிரினத்தை துன்புறுத்திய நபருக்கு வனத்துறை அபராதம் விதித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடந்தது ஈரோட்டில்?
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமி நகர், இ.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் செரியன் அகஸ்டின். இவர் தனது பண்ணை நிலத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவரது பண்ணை நிலத்திற்குள் எதிர்பாராத விதமாக ஒரு சாரைப்பாம்பு புகுந்துள்ளது. பொதுவாக விளைநிலங்களில் காணப்படும் இத்தகைய பாம்புகளை வனப்பகுதிக்குள் விடுவதே முறையான செயலாகும். ஆனால், செரியன் அகஸ்டின் அந்தப் பாம்பை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்குப் பதிலாக, தான் வளர்த்து வரும் வேட்டை நாயை ஏவி அதனைத் தொந்தரவு செய்துள்ளார்.

சாரைப் பாம்புடன் நாய்
தன்னுடைய நாய் பாம்புடன் மல்லுக்கட்டும் காட்சியை மிகவும் ஆர்வத்துடன் வீடியோ ரெக்க்கார்டு செய்த செரியன், அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோடும் செய்திருந்தார். இந்த வீடியோ குபீரென சோஷியல் மீடியாவில் வேகமாக பரவிவிட்டது.. இதையடுத்து,இ வன உயிரின ஆர்வலர்களின் கவனத்திற்கும் சென்றது.
வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்துவதையும், அதனை ஒரு பெருமையான விஷயமாக இணையத்தில் பரப்புவதையும் கண்ட ஆர்வலர்கள், இது குறித்து ஈரோடு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் இந்த புகாரின் பேரில் களமிறங்கிய வனத்துறையினர், சம்பந்தப்பட்ட செரியன் அகஸ்டினின் சமூக வலைதளப் பக்கங்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
மன்னிப்பு கேட்ட அகஸ்டின்
அதில் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ், அட்டவணை 1-ல் வகைப்படுத்தப்பட்டுள்ள சாரைப்பாம்பை துன்புறுத்துவது மற்றும் அதனை வீடியோ எடுத்துப் பரப்புவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பது உறுதி செய்யப்பட்டது.,, இத்தகைய வீடியோக்கள் மற்றவர்களையும் இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டும் என்பதால், வனத்துறையினர் அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விசாரணையைத் தொடர்ந்து, வன உயிரினத்தை துன்புறுத்திய குற்றத்திற்காக செரியன் அகஸ்டினுக்கு ரூ. 4,000 (அபராதம் விதிக்கப்பட்டது. அதிகாரிகளின் பிடியில் சிக்கிய பிறகுதான் அகஸ்டினுக்கு தன்னுடைய தவறு தெரியவந்துள்ளது.. இதையடுத்து தவறை உணர்ந்து கொண்டதாக சொன்னதுடன், வருத்தம் தெரிவித்து இன்னொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இனி வருங்காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் அவர் அதில் பிராமிஸ் செய்துள்ளார்..
வனத்துறை வார்னிங்
இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் ஒரு எச்சசரிக்கையை விடுத்துள்ளார்கள்.. அதில், "சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக வன உயிரினங்களைத் தொந்தரவு செய்பவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வளர்ப்புப் பிராணிகளை வைத்து வன உயிரினங்களை வேட்டையாடப் பழக்குவது, அவற்றைத் துன்புறுத்துவது அல்லது வேட்டையாட முயற்சிப்பது போன்றவை கடும் குற்றமாகும்.
குறிப்பாக, இதுபோன்ற செயல்களை வீடியோ எடுத்து இணையதளங்களில் பரப்பினால் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications