ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
எதையும் மறைக்காமல் யதார்த்த நிலையை பேசிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் சில குறைபாடுகள் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி ஒளிவு மறைவின்றி ஒப்புக் கொண்டுள்ளார்.
ஈரோடு மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க ஏற்கனவே முதலமைச்சர் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் பணிகள் முடிவடைய இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
திருமகன் ஈவெராவை பொறுத்தவரை எல்லோரிடமும் சிரித்த முகத்துடன் நட்பாக பழகக்கூடியவர் என்பதால் அவரது மறைவை ஈரோடு கிழக்குத் தொகுதி மக்களால் ஜீரணிக்கமுடியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

செயல்வீரர்கள் கூட்டம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் செயல்வீரர்கள் கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமாக நடத்தி முடித்த அமைச்சர் முத்துசாமி அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், திருமகன் ஈவெரா மறைந்து 14 நாட்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் திருமகன் ஈவெரா மறைவை சொல்லி சொல்லி தாய்மார்கள் மிகுந்த துயரப்படுவதாகவும் தெரிவித்தார். இவ்வளவு இளம் வயதில் திருமகன் மறைந்துவிட்டாரே என வாக்காளர்கள் வருத்தம் தெரிவிப்பதாக கூறினார்.

சிரித்த முகம்
திருமகன் ஈவெராவை பொறுத்தவரை சிரித்த முகத்துடன் எல்லோரிடமும் அன்பாக பாசமாக நடந்துக் கொள்ளக் கூடியவர் என்றும் தன்னை சந்திக்க வந்த பொதுமக்களிடம் அவர் முகம் சுளித்ததே கிடையாது எனவும் முத்துசாமி தெரிவித்தார். அவர் விட்டுச் சென்ற பணிகளை, ஈரோடு கிழக்குக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என திருமகன் ஈவெரா நினைத்தாரோ, அவற்றையெல்லாம் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிச்சயம் செய்வார் என உறுதியளித்தார்.

யதார்த்த மனிதர்
ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை அவர் ஒரு யதார்த்த மனிதர் என்றும் வெற்றிபெறுவது உறுதி எனவும் அமைச்சர் முத்துசாமி கூறினார். இதனிடையே ஈரோடு மாநகராட்சியில் சில குறைபாடுகள் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என்றும் அதை முதலமைச்சரின் கவனத்துக்கு ஏற்கனவே தாம் கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிவித்தார். திருமகன் ஈவெரா இருந்த போதே ஈரோடு மாநகர வளர்ச்சிக்கு அரசு 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாக தெரிவித்தார்.

கால அவகாசம்
ஈரோடு மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் முடிவடைய இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்தார். மாநகராட்சியில் நிலவும் குறைபாடுகளை மூடி மறைக்க விரும்பாமல் அதை ஒப்புக் கொண்ட அமைச்சர் முத்துசாமியின் துணிவு குறிப்பிடத்தக்கது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications