ஆந்திரா: விந்தையான குரலில் சத்தம் போட்டு மயங்கி விழும் மக்கள்! நூற்றுக் கணக்கானோரை தாக்கிய நூதன நோய்
ஹைதராபாத்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் எலுரு பகுதியில் மக்களிடையே நூதமான ஒரு வியாதி தாக்கியுள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
Recommended Video

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 290 பேர் இந்த மர்மமான நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
தெற்கு கோதாவரி மாவட்டம், எலுரு பகுதியைச் சேர்ந்த மக்கள், திடீரென இப்படி ஒரு நிலைமை தங்கள் பகுதியில் ஏற்படும் என நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் கடந்த 2 தினங்களாக, அங்குள்ள பலரும் திடீரென தலைசுற்றி மயங்கி கீழே விழத் தொடங்கினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நூதன சத்தம்
மயக்கமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வலிப்பு நோய் வந்தது போன்ற அறிகுறிகள் காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் படுக்கைகள் எல்லாம் நிரம்பியதால், நோயாளிகள் வரண்டாவில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர் நோயாளிகளில் பலர் விந்தையான குரலில் கூச்சலிடுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கவலைக்கிடமான நபர்கள் விஜயவாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடிநீர்
இதனிடையே இந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க மருத்துவர்கள் தீவிரம் காட்டுகிறார்கள். அப்பகுதியிலுள்ள குடிநீர் மாசுபாடு அடைந்து இப்படியான நிலை உருவானதா என்பதை அறியவும், உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறியவும், தண்ணீர் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா இல்லை
முதல்கட்ட தகவல்படி நீர் மாசுபாடு எதுவும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. எனவே, நோயாளிகளின் ரத்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று ஆந்திர மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவே சுறுசுறுப்பு
இந்த சம்பவம் குறித்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும் விசாரித்து, பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிகிச்சையையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான மருத்துவ சேவையை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆந்திர மாநில மாநில சுகாதார ஆணையர் கட்டமனேனி பாஸ்கரும் எலுருவுக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications