தெற்கு சூடானில் தத்தளித்த 154 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
திருவனந்தபுரம்: தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டுப்போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டுக்கு சென்ற C-17 ரக சிறப்பு விமானம், இன்று அதிகாலை 156 பேருடன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.
சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி தெற்கு சூடான் நாட்டுக்கு இரண்டு C-17 ரக சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதல் விமானம், 156 பேருடன் இன்று அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. பெண்கள் 9 பேர் , குழந்தைகள் 3 பேர் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 156 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். விமானம் டெல்லி செல்வதற்கு முன்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பயணிகள் திருவனந்தபுரத்தில் இறங்கினர்.
தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் விகே சிங், விமான நலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது 156 பேர் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே 30-40 பேர் அவர்களாகவே விமானம் மூலமாக இந்தியா வந்து சேர்ந்து விட்டனர். சுமார் 300 பேர் தங்களது தொழில் மற்றும் மற்ற காரணங்கால் எங்களுடன் வர மறுத்து விட்டனர்.
அவர்களை சமரசம் செய்து அழைத்துவர முயற்சித்தோம். ஆனால், உயிரைவிட தொழிலே முக்கியம் என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. அபாயத்தில் உள்ள இந்தியர்களை மீட்பதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி சுமார் 550-க்கும் மேற்போட்டோர் ஜுபாவிலும், 150 இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் கிணறு உள்ள பகுதிகளில் உள்ளதாகவுகவும் தெரியவந்தது என்று கூறினார்.
தெற்கு சூடானில் இருந்து சி-17 விமானம் இந்தியா வரும் போது, உள்துறை இணை அமைச்சர் விகே சிங் உகாண்டா நாட்டு பிரதமர் ருஹாகுனா ருகுன்டாவை சந்தித்துள்ளார். உகாண்டா தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ருஹாகனா ருகுன்டா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications