தெற்கு சூடானில் தத்தளித்த 154 இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
திருவனந்தபுரம்: தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டுப்போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டுக்கு சென்ற C-17 ரக சிறப்பு விமானம், இன்று அதிகாலை 156 பேருடன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது.
சூடானில் இருந்து பிரிந்த தெற்கு சூடானில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அந்நாட்டின் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தெற்கு சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 600 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பத்திரமாக இந்தியா கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி தெற்கு சூடான் நாட்டுக்கு இரண்டு C-17 ரக சிறப்பு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் முதல் விமானம், 156 பேருடன் இன்று அதிகாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தது. பெண்கள் 9 பேர் , குழந்தைகள் 3 பேர் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 156 பேர் இந்தியா வந்து சேர்ந்தனர். விமானம் டெல்லி செல்வதற்கு முன்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பயணிகள் திருவனந்தபுரத்தில் இறங்கினர்.
தெற்கு சூடானில் இருந்து இந்தியர்களை பத்திரமாக மீட்டு வந்த வந்த மத்திய உள்துறை இணை அமைச்சர் விகே சிங், விமான நலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது 156 பேர் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். ஏற்கனவே 30-40 பேர் அவர்களாகவே விமானம் மூலமாக இந்தியா வந்து சேர்ந்து விட்டனர். சுமார் 300 பேர் தங்களது தொழில் மற்றும் மற்ற காரணங்கால் எங்களுடன் வர மறுத்து விட்டனர்.
அவர்களை சமரசம் செய்து அழைத்துவர முயற்சித்தோம். ஆனால், உயிரைவிட தொழிலே முக்கியம் என அவர்கள் கருதுவதாக தெரிகிறது. அபாயத்தில் உள்ள இந்தியர்களை மீட்பதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி சுமார் 550-க்கும் மேற்போட்டோர் ஜுபாவிலும், 150 இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் கிணறு உள்ள பகுதிகளில் உள்ளதாகவுகவும் தெரியவந்தது என்று கூறினார்.
தெற்கு சூடானில் இருந்து சி-17 விமானம் இந்தியா வரும் போது, உள்துறை இணை அமைச்சர் விகே சிங் உகாண்டா நாட்டு பிரதமர் ருஹாகுனா ருகுன்டாவை சந்தித்துள்ளார். உகாண்டா தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் செய்யப்படும் என ருஹாகனா ருகுன்டா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications