72 ஆண்டுகளில் 14 பிரதமர்களை சந்தித்த இந்தியா... செங்கோட்டைக்கே செல்லாத இரு பிரதமர்கள்
Recommended Video

டெல்லி: இந்தியா 14 பிரதமர்களை சந்தித்துள்ள நிலையில் அவர்களுள் இரு பிரதமர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை.
இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதற்காக ஏராளமான தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் இந்த 72 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் ஆட்சி செய்துவிட்டனர். அவர்களுள் பின்வருவோர் பிரதமராக இருந்துள்ளனர்.

1. ஜவஹர்லால் நேரு
குல்சாரி லால் நந்தா (பொறுப்பு)
2. லால் பகதூர் சாஸ்திரி
3. இந்திரா காந்தி
4. மொர்ஜி தேசாய்
5. சரண் சிங்
6.ராஜீவ் காந்தி
7. வி.பி. சிங்
8. சந்திரசேகர்
9. பி.வி. நரசிம்மராவ்
10. அடல்பிகாரி வாஜ்பாய்
11. தேவெகௌடா
12. ஐ.கே. குஜ்ரால்
13. மன்மோகன் சிங்
14. நரேந்திர மோடி
இவர்களுள் அதிக முறை செங்கோட்டையில் கொடியேற்றியவர் நேரு ஆவார். இவர் 17 முறை கொடியேற்றியுள்ளார். 16 முறை கொடியேற்றி இரண்டாவது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார்.
சரண் சிங், வி.பி. சிங், தேவெகௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மிகவும் குறைந்த பட்சமாக ஒரு முறை மட்டுமே கொடியேற்றியுள்ளனர். இந்த 14 பேரில் குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகியோர் ஒரு முறை கூட கொடியேற்றியது இல்லை.
இவர்களில் குல்சாரிலால் கடந்த 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மட்டுமே (பொறுப்பு) பிரதமராக இருந்தார். அதுபோல் சந்திரசேகர் கடந்த 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி முதல் 1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை 223 நாட்கள் பிரதமராக இருந்தார்.
குல்சாரிலால் நந்தா பொறுப்பு பிரதமர் பதவி மட்டுமே வகித்ததாலும் சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததாலும் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததால் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications