72 ஆண்டுகளில் 14 பிரதமர்களை சந்தித்த இந்தியா... செங்கோட்டைக்கே செல்லாத இரு பிரதமர்கள்
Recommended Video

டெல்லி: இந்தியா 14 பிரதமர்களை சந்தித்துள்ள நிலையில் அவர்களுள் இரு பிரதமர்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை.
இந்தியா கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. இதற்காக ஏராளமான தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்தியா விடுதலை பெற்ற நாள் முதல் இந்த 72 ஆண்டுகளில் 14 பிரதமர்கள் ஆட்சி செய்துவிட்டனர். அவர்களுள் பின்வருவோர் பிரதமராக இருந்துள்ளனர்.

1. ஜவஹர்லால் நேரு
குல்சாரி லால் நந்தா (பொறுப்பு)
2. லால் பகதூர் சாஸ்திரி
3. இந்திரா காந்தி
4. மொர்ஜி தேசாய்
5. சரண் சிங்
6.ராஜீவ் காந்தி
7. வி.பி. சிங்
8. சந்திரசேகர்
9. பி.வி. நரசிம்மராவ்
10. அடல்பிகாரி வாஜ்பாய்
11. தேவெகௌடா
12. ஐ.கே. குஜ்ரால்
13. மன்மோகன் சிங்
14. நரேந்திர மோடி
இவர்களுள் அதிக முறை செங்கோட்டையில் கொடியேற்றியவர் நேரு ஆவார். இவர் 17 முறை கொடியேற்றியுள்ளார். 16 முறை கொடியேற்றி இரண்டாவது இடத்தில் இந்திரா காந்தி உள்ளார்.
சரண் சிங், வி.பி. சிங், தேவெகௌடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் மிகவும் குறைந்த பட்சமாக ஒரு முறை மட்டுமே கொடியேற்றியுள்ளனர். இந்த 14 பேரில் குல்சாரிலால் நந்தா மற்றும் சந்திர சேகர் ஆகியோர் ஒரு முறை கூட கொடியேற்றியது இல்லை.
இவர்களில் குல்சாரிலால் கடந்த 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மட்டுமே (பொறுப்பு) பிரதமராக இருந்தார். அதுபோல் சந்திரசேகர் கடந்த 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி முதல் 1991-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வரை 223 நாட்கள் பிரதமராக இருந்தார்.
குல்சாரிலால் நந்தா பொறுப்பு பிரதமர் பதவி மட்டுமே வகித்ததாலும் சந்திரசேகர் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததாலும் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருவரும் மிகக் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ததால் அவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications