மது கொடுக்க முடியாதா?: பப் ஊழியர்களை அடித்து நொறுக்கிய 25 டாக்டர்கள் கைது
Recommended Video

ஆக்ரா: ஆக்ராவில் மது கொடுக்க மறுத்த பப் ஊழியர்களை தாக்கிய 25 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பிரபலமான எஸ்.என். மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் 25 ஜூனியர் மருத்துவர்கள் கடந்த சனிக்கிழமை இரவு பப்புக்கு சென்றுள்ளனர்.

பப் மூடும் நேரம் என்பதால் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மருத்துவர்களுக்கு மது கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த மருத்துவர்கள் பப் ஊழியர்களை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்த பொருட்களையும் உடைத்துள்ளனர்.
இதை தடுக்க வந்த போலீசாரையும் தாக்கி அவர்களின் சீருடைகளை கிழித்துள்ளனர். இதையடுத்து அட்டகாசம் செய்த 25 மருத்துவர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். 15 பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என்று எஸ்.எஸ். பி. அமித் பதக் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து அறிந்ததும் மருத்துவக் கல்லூரியில் உள்ள பிற மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கல்லூரி முதல்வர் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
சக மருத்துவர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாட பப்புக்கு சென்ற இடத்தில் தான் இந்த பிரச்சனை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications