உயிர் குடிக்கும் பெங்களூர் 'மரண கிணறுகள்'.. 10 நாட்களில் இளம் பெண் உட்பட 4 பேர் பலி!
பெங்களூர்: தொடர் மழையால் பெங்களூரின் சாலைகள் படு மோசமாக கிணறு போல மாறியுள்ளதால், அதை சார்ந்த விபத்துகளில் இந்த 10 நாட்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் அச்சுறுத்துகின்றன.
ஐடி தலைநகர் பெங்களூர் செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத மழையை எதிர்கொண்டது. சாதாரண மழைக்கே காணாமல் போகும் சாலைகள், இந்த மழைக்கு பொறுக்குமா? குண்டும், குழியுமாக சாலைகள் காட்சியளிக்கின்றன.

வேகமாக செல்லும் வாகனங்கள், அதிலும் டூவீலர் ஓட்டிகள், குண்டு, குழியில் இருந்து தப்பிக்க திடீரென பிரேக் போடுவது, வண்டியை திருப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இன்று நடைபெற்ற இப்படியான ஒரு விபத்தில், தேவனஹள்ளி பகுதியை சேர்ந்த, 21 வயது இளம் பெண், வீணா பலியானார். வீணா தனது அக்கா லட்சுமியின் ஸ்கூட்டரில் பின்னால் அமர்ந்து பயணித்தார். அப்போது குண்டு, குழியில் சிக்கி ஸ்கூட்டர் கீழே சரிந்தது. அப்போது பின்னாலிருந்து வந்த லாரி அவர்கள் மீது ஏறிச் சென்றது. இதில் வீணா சம்பவ இடத்தில் பலியானார். லட்சுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடி வருகிறார்கள். கடந்த திங்கள்கிழமை, மைசூரு சாலை, நாயன்டஹள்ளியில் ஒரு பெண்ணும், கடந்த வாரத்தில் கே.ஆர்.மார்க்கெட் பகுதியிலுள்ள மைசூர் ரோடு மேம்பாலத்தில் ஒரு வயதான தம்பதியும், பைக்கில் சென்றபோது குண்டு, குழி காரணமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலைமை மோசமாகும் நிலையில், இன்னும் 2 வாரங்களுக்குள் நகரிலுள்ள சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications