நேபாளம் - இந்திய எல்லையில் லேசான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.2 ஆக பதிவு
நேபாளம் - இந்திய எல்லையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நேபாளம் - இந்திய எல்லையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்திய - நோபாள எல்லையில் இன்று இரவு 10.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உத்ரகாண்ட், அல்மோரா, ஸ்ரீநகர், கர்ஹாவால் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அங்கு வசித்த பொது மக்கள் உடனடியாக பீதியில் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம், உயிர்சேதம் குறித்த உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications