டெல்லியில் யமுனையில் விநாயகர் சிலைகளை கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலி
டெல்லி: டெல்லியில் விநாயகர் சிலைகளை யமுனை ஆற்றில் கரைக்கையில் 7 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி வடக்கு டெல்லியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய விநாயகர் சிலை நேற்று வாசிராபாத்தில் உள்ள யமுனை ஆற்றில் கரைக்கப்பட்டது. சிலையை 20 முதல் 30 வயது வரை உள்ள 12 பேர் தூக்கிச் சென்று ஆற்றுக்குள் இறங்கினர். ஆற்றில் ஆழம் இல்லாததால் அவர்களில் உட்பகுதிக்கு சென்றனர். அப்போது நீரின் வேகத்தால் அவர்கள் நிலை தடுமாறினர். இதையடுத்து ஆற்று நீர் அவர்களை அடித்துச் சென்றது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் நீரில் மூழ்கிய 12 பேரில் 7 பேரைத் தான் உயிரோடு காப்பாற்ற முடிந்தது. 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மீதமுள்ள 3 பேரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.
இதே போன்று காஷ்மீர் கேட் உள்ள குதேஷியா காட் பகுதியில் விநாயகர் சிலையை யமுனை ஆற்றில் கரைக்கும்போது 3 பேர் நீரில் மூழ்கினர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டார், மீதமுள்ள 2 பேர் பலியாகினர். அவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications