உ.பி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து.. 9 பேர் சாவு.. 100 பேர் காயம்!
உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரேபரேலி: உத்தரப்பிரதேசத்தில் அனல்மின் நிலைய பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியின் உன்சஹார் என்ற இடத்தில் என்டிபிசி எனும் தேசிய அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த அனல் மின் நிலையம் 1988ஆம் ஆண்டு முதல் மின்உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கிட்டதட்ட 30 ஆண்டுகள் பழமையான இந்த அனல்மின் நிலையத்தில் முதல் 5 அலகுகள் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வருகின்றன.

பாய்லர் வெடித்து விபத்து
6வது அலகில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் 6 அலகில் உள்ள பாய்லர் இன்று திடீரென வெடித்து சிதறியது.

9 பேர் பலி, 100 பேர் காயம்
இதில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயமடைந்துள்ளனர்.

உயிரிழப்பு அதிகரிக்கும் அச்சம்
அவர்களில் பலர் என்டிபிசி வளாகத்தில் உள்ள மருத்துவமனையிலும் பலத்த காயங்களுடன் மோசமான நிலையில் உள்ள பலர் லக்னோ மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ரூ. 2 லட்சம் இழப்பீடு
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாள் அரசு முறை பயணமாக மொரிஷியஸ் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவலறிந்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications