திருப்பதியில் எடப்பாடிக்கு எதிராக சாமியாடிய பக்தர்.. திட்டி தீர்த்ததால் பரபரப்பு
திருப்பதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஆந்திரா: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பக்தர் ஒருவர் சாமியாடி திட்டி தீர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
நேற்றிரவு லஷ்மி நரசிம்மர் கோவிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்த போது திடீரென பக்தர் ஒருவர் ஆவேசமாக கத்தி சாமியாடினார்.

ஆவேசமாக கத்திய பக்தர்
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தை சீரழித்து விட்டதாகவும், தன்னை வந்து பார்க்குமாறும் ஆவேசமாக கத்தினார். இதனை சற்றும் எதிர்பாரத எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்
இதையடுத்து அந்த நபரை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கி சென்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஸ்ரீராமலு என தெரியவந்தது.

முதல்வருக்கு எதிராக
ஸ்ரீராமலுவிடம் விசாரணை நடத்திய போலீசார் சில மணி நேரம் கழித்து விடுவித்தனர். திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சாமியாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டி தீர்த்த சம்பவம்
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சாமியாக சித்தரித்து குறும்படங்கள் வெளியாகின இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியத. இந்நிலையில் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சாமியாடி அவரை பக்தர் ஒருவர் திட்டி தீர்த்தது அங்கிருந்த பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
சென்னை சிறுவனுக்கு பாலியல் தொல்லை! கோட் சூட் போட்டோஷூட் நடத்தினால் மட்டும் போதாது! இபிஎஸ் அட்வைஸ் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications