மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியர் அடித்துக்கொலை.. ஜார்க்கண்டில் பயங்கரம்!
ஜார்க்கண்டில் மாட்டுக்கறி எடுத்து சென்ற இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹசாரிபாக்: ஜார்க்கண்டில் மாட்டுக்கறி எடுத்து சென்ற இஸ்லாமியர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது வேனும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை பயன்படுத்த மத்திய அரசு அண்மையில் தடைவிதித்தது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல மாநிலங்களில் மத்திய அரசின் மாட்டிறை மீதான சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மாட்டிறைச்சி மற்றும் மாடுகளை கொண்டு செல்பவர்களை பசு பாதுகாப்பு கூட்டத்தினர் அடித்து கொலை செய்து வருகின்றனர்.

வேனில் மாட்டுக்கறி
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவர் அலிமுதீன் என்ற அஸ்கர் அன்சாரி. இவர் தடை செய்யப்பட்ட மாட்டுக்கறியை வேனில் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.

சரமாரியாக தாக்குதல்
இதையடுத்து பஜர்தாண்ட் கிராமத்தில் அவரது வாகனத்தை மறித்த ஒரு கும்பல் அவரை சரமாரியாகத் தாக்கியது.அந்த கும்பல் அவரது வேனையும் தீ வைத்து எரித்தனர்.

உயிரிழந்த நபர்
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

10 பேர் கைது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி அதனை பசுவுக்காக சட்டத்தை மக்கள் கையிலெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடி நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications