திருப்பதி ஏழுமலையான் கோவில் அறைகளில் தங்குவதற்கு ஆதார் கட்டாயம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆதார் அட்டை வழங்கினால் மட்டுமே தங்கும் அறைகள் ஒதுக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
திருப்பதி : உலகிலேயே பணக்காரக் கடவுள் என்று வணங்கப்படும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகளை வாடகைக்கு விடுவதில் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
திருப்பதி செல்வோருக்கு வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பதால் விடுமுறைக் காலங்கள் மட்டுமின்றி எப்போதுமே பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்ற சிறப்பை பெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவோருக்கு புதிய திட்டத்தை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானம் சார்ல் திருமலையில் 6200 அறைகள் உள்ளன. இதில் 3000 அறைகள் ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்யப்படுகின்றன. எஞ்சிய அறைகளில் முக்கிய பிரமுகர்ளுக்கான ஒதுக்கீடு போக ரூ. 50 முதல் ரூ.1000 வரையில் அறைகள் பக்தர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
திருமலையில் உள்ள சிஆர்ஓ அலுவலகம் மற்றும் எம்பிசி ஆகிய இடங்களில் நேரடியாக வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று முதல் காலை 6 மணி மற்றும் மதியம் 2 மணி என இரு வேலை நேரங்களில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் பக்தர்களுக்கு வழங்கப்படும் வரிசை எண் அடிப்படையில், காலியாகும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் அறைகள் பெறமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும், அறைகள் பெற பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் ஆத்திரமடைந்தவர்கள் கோயில் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications