ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி, காவேரி முன்ஜாமீன் மனு விசாரணை ஆக. 1க்கு ஒத்திவைப்பு
டெல்லி: ஏர்செல் - மேக்சிஸ் பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை மிரட்டி, அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாக புகார் எழுந்தது.
இந்தப் பணபரிவர்த்தனையில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக, டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்க துறை சார்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தயாநிதி மாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன் உட்பட 6 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

ஏர்செல்-மேக்சிஸ் பேர முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மாறன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன் அடிப்படையில், கடந்த 11ம் தேதி மாறன் சகோதரர்களான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி ஆகியோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர்.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்நிலையில், வழக்குரைஞர் காலஅவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு சிபிஐ நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாறன் சகோதோரர்கள், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன், காவேரி கலாநிதி, சவுத் ஆசியா எஃப்எம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சண்முகம் உள்ளிட்டோர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் விசாரணை இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால், மாறன் சகோதரர்களுக்கு முன்ஜாமீன் கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்ற தகவலும் வெளியாகியுள்ளனது.
தேவைப்படும் பட்சத்தில், மாறன் சகோதரர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரவும் அமலாக்கத்துறையினர் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
இதனிடையே டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தயாநிதிமாறன், சன் குழுமத்தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் ஆகியோர் இன்று ஆஜராகினர். முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஓ.பி சைனி உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications