மதச்சார்பின்மை குறித்து இழிவான பேச்சு-மத்திய அமைச்சர் ஆனந்தகுமாருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அமளி!!
மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற
டெல்லி: மதச்சார்பின்மையாளர்கள் குறித்து இழிவாக விமர்சித்த மத்திய அமைச்சர் ஆனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற இரு சபைகளும் அமளி காடானது.
மதச்சார்பின்மையாளர்கள் என்பவர் தங்களது பெற்றோர் யார் என தெரியாதவர்கள் என கேவலமாக விமர்சித்திருந்தார் ஆனந்தகுமார் ஹெக்டே. அத்துடன் மதச்சார்பின்மை என்பதையே அரசியல் சாசனத்தில் இருந்து மாற்றுவோம்; அதற்குதான் பாஜக ஆட்சிக்கே வந்திருக்கிறது என்றும் கூறினார்.

அவரது இப்பேச்சு நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் இந்த விவகாரத்தை எழுப்பினார். அப்போது, நாட்டின் அரசியல் சாசன அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாத ஒருவர் எப்படி மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியும் என கேள்வி எழுப்பினார் குலாம்நபி ஆசாத்.
மேலும், ஆனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து பிரதமர் மோடி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தினார்.
ஆனந்தகுமார் ஹெக்டேவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியில் முழக்கமிட்டனர். இதனால் அமளி துமளியாக இருந்தது.
இதேபோல் லோக்சபாவிலும் ஆனந்தகுமார் விமர்சனத்தால் அமளி ஏற்பட்டது. இதனால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications