ஆற்றுக்கால் பகவதி கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை !
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது பிரசித்திபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன். பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் இங்கு மாசி மாதம் நடைபெறும் பொங்கல் விழா மிகவும் சிறப்பு பெற்றது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது இந்த கோவிலின் மற்றொரு சிறப்பாகும்.

இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் லட்சக்கணக்கானோர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று காலை நடைபெற்றது.

இதைதொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் சுத்த பூஜையும் தொடர்ந்து கண்ணகி சரித்திர பாடல் பாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கோவில் முன்பு உள்ள பொங்காலை அடுப்பில் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் கோவில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீ மூட்டினார். இதை தொடர்ந்து கோவிலை சுற்றி திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

கடந்த ஆண்டு 30 லட்சம் பெண் பக்தர்கள் பொங்கல் விழாவில் பங்கேற்று இருந்தனர். இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் திரண்டு பொங்கல் விழாவில் பங்கேற்றது கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக கோவில் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இதில் கேரள ஆளுநர் சதாசிவத்தின் மனைவி சரஸ்வதி, தமிழ், மலையாள நடிகைகள் இனியா, சிப்பி, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications