ஆட்சியில் இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான்.. குஜராத் மாடல்.. போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி!
அகமதாபாத் : கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூபாய் 3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான் எனப் பேசியுள்ளார்.

குஜராத்
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரதமர் மோடி 4வது முறையாக அங்கு சென்றுள்ளார். குஜராத் தேர்தலை முன்னிட்டு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி பல திட்டங்களைத் துவங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் ரூ.3,050 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

மக்கள் நலனுக்கே முன்னுரிமை
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டதால்தான் நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வேலை செய்வதில்லை. எங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காக கடமையாற்றுகிறோம்.

மக்களுக்கு சேவை செய்யவே அதிகாரம்
எங்களைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பது, அதிகாரத்தில் இருப்பது என்பது மக்களுக்கு சேவை செய்யத்தான். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள்தான் எங்கள் அரசின் முன்னுரிமை. குஜராத் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள அதிக வளர்ச்சி என்பது குஜராத்தின் பெருமை. கடந்த 8 ஆண்டுகளாக இந்த மாநில மக்களின் நலன்களுக்காகவே அதிக அழுத்தம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்." எனப் பேசினார்.

ராக்கெட் ஏவும்போது
மேலும், பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இந்திய விண்வெளி துறையின் இன் - ஸ்பேஸ் மைய தலைமையகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, இஸ்ரோ ராக்கெட்டை ஏவுகையில் ஒட்டு மொத்த நாடும் எழுந்து நின்று அதன் வெற்றிக்காக பிரார்த்திக்கிறது. நமது விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகிறார். நாட்டின் கடைகோடி பகுதிக்கும் செயற்கைக்கோள் மூலமாக தகவலை எடுத்துச் சென்று கல்வித்துறை மாற்றத்திற்கு விண்வெளி தொழில்நுட்பம் உதவுகிறது எனத் தெரிவித்தார்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications