ஸ்டிரைக்கில் தாக்குதல்.. ஹெல்மெட் போட்ட பேருந்து ஓட்டுநர்கள்.. இது கொல்கத்தா ஆச்சரியம்
கொல்கத்தா:மத்திய அரசு மற்றும் வங்கி ஊழியர்களின் போராட்டம் எதிரொலியால், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் ஹெல்மெட் அணிந்துகொண்டு பேருந்துகளை இயக்கினர்.
மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி, தொ.மு.ச உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் 15 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட வடமாநிலங்கள்
போராட்டத்தால் மேற்கு வங்கம், கேரளா,பீகார் ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. அங்கு கடைகள், வணிக வளாகங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. வாகன போக்குவரத்து அடியோடி நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் வேலை நிறுத்த போராட்டத்தால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது, அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டதால் ஓட்டுநர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, ஹெல்மெட் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
|
போராட்டத்தின் போது கைது
இதனிடையே, கொல்கத்தாவில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டனர். அதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக, கொல்கத்தாவின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
|
ரயில் நிலையத்தில் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் பர்த்வான் ரயில் நிலையத்தில் பயணிகள் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினரும் கைது செய்யப்பட்டனர். மும்பையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிற்சங்கத்தினரும் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொழிலாளர்கள் முழக்கம்
36,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்பையின் முக்கிய பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மத்திய அரசை ண்டித்தும், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தும் முழக்கங்கள் எழுப்பட்டன.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications