கர்நாடகாவில் பாஜக ஆட்சி.. இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா?
கர்நாடகாவில் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ள நிலையில் இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக ஆட்சி உறுதியாகி உள்ள நிலையில் இனியாவது காவிரி நீர் தமிழகத்திற்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருந்தன.
ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது. இதனால் அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக ஆட்சி அமைந்தால்
கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், எச் ராஜா, வானதி ஸ்ரீனிவாசன், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கூறி வந்தனர்.

இரண்டு முறை வாய்தா
காவிரி தொடர்பான வழக்கில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடக தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் இரண்டு முறை வாய்தா வாங்கியது மத்திய அரசு.

மத்திய அரசு தயார்
கர்நாடகாவில் தேர்தல் முடிந்த நிலையில் நேற்று வரைவு திட்ட அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தயாராக உள்ளது என உறுதியளித்தது.

காவிரி நீர் கிடைக்குமா?
இந்நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளதால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக பாஜக தலைவர்கள் கூறியபடியே தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேருமா? பொருத்திருந்து பார்ப்போம்..
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications