ஆதர்ஷ் ஊழல்: மகா. மாஜி முதல்வர் அசோக் சவாண் மீது வழக்கு தொடர ஆளுநரிடம் மீண்டும் அனுமதி கோரியது சிபிஐ
மும்பை: ஆதர்ஷ் வீட்டு வாரிய ஊழல் தொடர்பாக மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரான காங்கிரஸைச் சேர்ந்த அசோக் சவாண் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநரிடம் சி.பி.ஐ. மீண்டும் மனு அளித்துள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தபோது ஆதர்ஷ் வீட்டு வசதி வாரிய முறைகேடு நடந்தததாக புகார் எழுந்தது.

முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தில் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்காகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில், அப்போதைய முதல்வர் அசோக் சவாணின் உறவினர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அசோக் சவாண் பதவி விலகினார்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சவான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி சிபிஐ கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் கே.சங்கரநாராயணனிடம் முறையிட்டனர். ஆனால் ஆளுநர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து விசாரணை நீதிமன்றத்தில் ஆளுநர் அனுமதி வழங்காததால் சவாண் பெயரை குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்குமாறு சிபிஐ கோரிக்கை விடுத்தது. அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததையடுத்து சிபிஐ அதிகாரிகள் மும்பை உயர் நீதிமன்றத்தை நாடினர்.
கடந்த நவம்பர் மாதம் சிபிஐயின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஆளுநர் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி சதி வழக்குப் பதிவு செய்வதற்குதான் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், சவான் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்றனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் சாவிடம் மீண்டும் மனு அளித்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள். அதில் அசோக் சவாண் மீது வழக்குத் தொடருவதற்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அசோக் சவாண் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அமைச்சரவையும் ஆளுநர் வித்யாசாகருக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications