சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி வழக்கு விசாரணை… நாளை ஒத்திவைப்பு
சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி உயநீதிமன்றம், அது தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே ஒன்றிரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில், மறுகூட்டலில் 45 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்தது. இதன் மூலம், மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்திருப்பதாக வலுவான புகார் எழுந்தது.
வழக்கு
இதனை எதிர்த்து, மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது, மதிப்பெண் குளறுபடி குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 'மதிப்பெண் கூட்டலிலேயே இவ்வளவு தவறுகள் நடந்திருந்தால், விடைத்தாள் திருத்தத்தில் எவ்வளவு தவறு நடந்திருக்கும்?' என்று தங்களது அதிர்ச்சியை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறுகளை சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீதிபதிகள் முன்பு பதிலளித்தார்.
நாளை விசாரணை
இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை விசாரணைக்கு பின்னர் மதிப்பெண் குளறுபடியில் ஒரு முடிவு பிறக்கும் என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications