சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி வழக்கு விசாரணை… நாளை ஒத்திவைப்பு
சி.பி.எஸ்.இ. மதிப்பெண் குளறுபடி தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி: சி.பி.எஸ்.இ. விடைத்தாள் திருத்தத்தில் தவறு நடந்து இருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ள டெல்லி உயநீதிமன்றம், அது தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு வெளியான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வுகளில், நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கே ஒன்றிரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. இது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த நிலையில், மறுகூட்டலில் 45 மதிப்பெண்கள் வரை கூடுதலாகக் கிடைத்தது. இதன் மூலம், மதிப்பெண் கூட்டலில் குளறுபடி நடந்திருப்பதாக வலுவான புகார் எழுந்தது.
வழக்கு
இதனை எதிர்த்து, மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கேள்வி
அப்போது, மதிப்பெண் குளறுபடி குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 'மதிப்பெண் கூட்டலிலேயே இவ்வளவு தவறுகள் நடந்திருந்தால், விடைத்தாள் திருத்தத்தில் எவ்வளவு தவறு நடந்திருக்கும்?' என்று தங்களது அதிர்ச்சியை நீதிபதிகள் தெரிவித்தனர்.
உரிய நடவடிக்கை
சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தவறுகளை சி.பி.எஸ்.இ. கவனத்துக்கு கொண்டு வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று நீதிபதிகள் முன்பு பதிலளித்தார்.
நாளை விசாரணை
இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். நாளை விசாரணைக்கு பின்னர் மதிப்பெண் குளறுபடியில் ஒரு முடிவு பிறக்கும் என்று மாணவர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications