மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு! மாநிலங்களிடையே மின்தடம் அமைக்க ரூ.12,500 கோடியில் திட்டம்!!
டெல்லி: மாநிலங்கள் இடையே மின் வழித்தடத்தை வலுவாக்கும் வகையில், ரூ.12 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள 9 மின் திட்டங்களுக்கு மத்திய மின்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம், ஹரியானா, சட்டீஸ்கர், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த புதிய திட்டங்களால் பலன் கிடைக்கும். 2100 மெகாவாட் மின்சாரத்தை எடுத்து செல்லும் வகையில் 765 கே.வி. மின்கம்பிகள் அமைக்கவும், புதிதாக 765/400 கேவி துணை மின் நிலையங்கள் அமைக்கவும் இந்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்ல இந்த மின்கம்பிகளும், மின் நிலையங்களும் உதவிகரமாக இருக்கும். மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்கள் மட்டுமின்றி, தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் மின்சாரம் எடுத்துச் செல்ல இதனால் முடியும்.
இந்த பணிகளுக்காக டெண்டர் விடப்படும். தனியார் முதலீட்டாளர்களும் டெண்டரில் பங்கேற்கலாம். அடுத்த மூன்றாண்டுகளில் மத்திய மின்தொகுப்பில் 28 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக சேர்க்கப்படும். இதன் மூலம் மத்திய மொத்த மின்தொகுப்பின் கொள்ளளவு 66ஆயிரம் மெகாவாட்டாக 2017ம் ஆண்டுக்குள் உயரும். இத்திட்டங்கள், ஆரம்ப கட்டத்திலேயே, பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது அதை வேகப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக மேற்கொள்ளப்பட உள்ள 9 திட்டங்களில் நெய்வேலி அனல்மின் நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.612 கோடி செலவில் மின்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 400 மெகாவாட்டுக்கான 'மின்பகிர்வு சிஸ்டம்' திட்டத்தை செயல்படுத்த இந்த தொகை செலவிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ள மாநில அரசு முயன்றது. ஆனால் வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு மின்வழித்தடம் இல்லாததால் மின்சாரத்தை கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இப்பிரச்சினையை தீர்த்து மின் வழித்தடத்தை அமைக்குமாறு கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications