அரசுகளுக்கு குடைச்சல் கொடுக்கும் பசுமைத் தீர்ப்பாயம்.. அதிகாரத்தை பிடுங்க நடவடிக்கை!
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர், உறுப்பினர் நியமன முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது.
டெல்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்து வரும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர், தலைவர் நியமனத்தில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயம், 2010 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முதன்மை அமர்வு டில்லியிலும் மண்டல அமர்வுகள் சென்னை உட்பட நாட்டின் நான்கு இடங்களிலும் உள்ளன. இத்துடன் சிம்லா, ஷில்லாங், ஜோத்பூர் மற்றும் கொச்சியிலும் சர்க்கியூட் அமர்வுகள் உள்ளன. இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவைகளை நிறுத்தி வைப்பது, கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது போன்றவற்றை இந்த தீர்ப்பாயத்தால மேற்கொள்ள முடியும். தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மட்டுமே வழக்கு தொடுக்க முடியும்.

கடுமை காட்டும் தீர்ப்பாயம்
பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் விஷயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. சில நேரங்களில் அரசு அதிகாரிகளுக்கு கடிவாளமிடும் உத்தரவுகளையும் தீர்ப்பாயம் செய்துள்ளது. இதனால் சிக்கலில் மாட்டிக் கொண்ட அரசு தன்னுடைய அதிகார வரம்பிற்குள் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தலையிடுவதாக கருதியது.

புதிய விதிகள் அறிவிப்பு
இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் நியமனத்தில் சில மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி தீர்ப்பாயம் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது ஹைகோர்ட் தலைமை நீதிபதி தான் இருக்க வேண்டும். இவர் தலைமையின் கீழ் இந்த தீர்ப்பாயத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் புதிய விதிகளை பிறப்பித்துள்ளது.

அதிகாரத்தை பறிக்கும்
இந்த புதிய உத்தரவிற்கு எதிர்க்கட்சிகளும், சட்ட வல்லுநர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கும் அமைப்புகளை அரசு தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தேர்வு முறை
தற்போதைய நிலையில் தீர்ப்பாயத்தின் தலைவர் இந்திய தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்டவரை கொண்ட 5 உறுப்பினர்கள் குழு தலைவரைத் தேர்வு செய்கிறது. ஏனைய 4 பேரும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அமைச்சரவைக்கு நீக்கும் அதிகாரம்
ஏற்கனவே இருந்த விதியான தீர்ப்பாயத்தின் தலைவரை நீக்க வேண்டும் என்றால், தலைமை நீதிபதியின் கருத்தை கேட்ட வேண்டும் என்பது மாற்றப்பட்டுள்ளது. புதிய விதியின்படி தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினரை, விசாரணை நடத்திய மத்திய அமைச்சரவை நீக்க முடியும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சம்பள விகிதத்திலும் மாற்றம்
தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்றும் அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என முந்தைய விதிகளில் கூறப்பட்டு இருந்தது. இது, தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள் மட்டுமே என்றும் கிரேடு 1 அதிகாரிக்கு இணையான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என, விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications