”ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்?”- தலைமை தேர்தல் அதிகாரி வி.எஸ்.சம்பத் பதில்!
டெல்லி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தெரிவித்துள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து அவரது சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தாற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த 17 ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும், வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் அளித்து நால்வரையும் ஜாமீனில் விடுதலை செய்தது.
இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், "இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. பொதுவாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதி காலியாகும் அறிவிப்பு அரசிதழில் வெளியானவுடன் அத்தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் உள்ளது.
அவசரகதியில் உடனடியாக தேர்தல் நடத்திவிட முடியாது. எனவே, முறைப்படி இந்த விவகாரத்தில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications