300 வீரர்கள்.. பெரும் சதியோடு வந்த சீனா! “சல்லி சல்லி”யாக நொறுக்கிய இந்திய படை -எல்லையில் செம “மாஸ்”

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன.

இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக எல்லை பகுதிகளை ஆக்கிரமித்தும் இருக்கிறது.

இந்திய எல்லைக்குள் வீடுகள், சாலைகளை அமைத்த சீனா அங்கு ஒரு நகரத்தையே உருவாக்கி இருப்பதை சாண்டிலைட் புகைப்படங்களின் மூலம் அறிய முடிந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.

பாதுகாப்பு பணி

பாதுகாப்பு பணி

இதனால் இந்தியா சீனா இடையே மோதல் போக்குகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இந்த நிலையில், சீன எல்லையோரத்தில் அமைந்து உள்ள அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் வழக்கம்போல் கடந்த 9 ஆம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர்.

சீனா தாக்குதல்

சீனா தாக்குதல்

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இருநாட்டு ராணுவ வீரர்களை நோக்கி சீன படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மோதல் எற்பட்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

வீரர்களுக்கு இடையே மோதல் வெடித்த சிறிது நேரத்திலேயே, எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் அமர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இரு நாட்டு ராணுவ வீரர்களை அமைதிப்படுத்துவது மற்றும் தாக்குதல் நடந்த இடத்தில் இயல்பு நிலையை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திட்டமிட்டு வந்த சீனா

திட்டமிட்டு வந்த சீனா

9 ஆம் தேதி நடந்த இரு தரப்பு மோதல் குறித்த தகவல் 3 நாட்கள் கழித்து நேற்று வெளியான நிலையில், இதில் சீனாவுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை எனவும், சீனா முன் ஏற்பாட்டுடன் 300 வீரர்களை தாக்குதலுக்காக தயார்படுத்தி கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பியடித்த இந்தியா

திருப்பியடித்த இந்தியா

ஆனால், சுதாரித்துக் கொண்ட இந்திய படையினர் பதில் தாக்குதல் நடத்தி சீன ராணுவத்தை விரட்டியத்துவிட்டதாகவும், இதனை சீன படையினர் துளி கூட எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் சீனா வீரர்களே அதிகளவில் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்துமீறல்

கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோல் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா படைகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் வந்தனர். அவர்களின் ஊடுருவலை தடுக்க முயன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+