இந்திய சீன எல்லையில் போர் மேகம்... இரு நாடுகளும் ராணுவ வீரர்களை குவித்துள்ளதால் பதற்றம் அதிகரிப்பு
இந்திய சீன எல்லையில் இருநாட்டு ராணுவமும் தலா 3000 வீரர்களை குவித்துள்ளதால் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னை காரணமாக, இருநாட்டு ராணுவங்களும், தலா 3000 வீரர்களை தங்களது எல்லைகளில் நிறுத்திவைத்துள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
சிக்கிம், பூடான், திபெத் ஆகிய 3 பகுதிகளையும் இணைக்கும் தோகா லா சந்திப்பு யாருக்குச் சொந்தம் என்பதில், இந்தியா, சீனா இடையே நீண்டகாலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இப்போது இரு நாடுகளுமே அந்த பகுதிக்கு உரிமை கொண்டாடி வருவதால், அங்கே பதற்றம் உருவாகியுள்ளது.

தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருநாட்டு ராணுவங்களும் தேசியக் கொடி ஏற்றி, பலத்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. அதேசமயம், சீன ராணுவம், 3000 வீரர்களை அப்பகுதியில் நிலைநிறுத்தியுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவமும் உடனடியாக 3000 வீரர்களை நிறுத்தி, பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இரு தரப்பு வீரர்களும் மிக அருகாமையில் நேருக்கு நேராக நடமாடி வருகின்றனர் என்பதால் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய இடத்தை, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதன் அருகே உள்ள காங்கடாக், கலிம்போங் இடங்களில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம்களையும் ராவத் ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பிட்ட இடத்தில் இருந்து பின்வாங்க இருதரப்புமே மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பும் தொற்றிக் கொண்டுள்ளதாக, ராணுவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
சர்ச்சைக்குரிய இடத்தின் வழியாக, சீன ராணுவம், தங்களது எல்லைப் பாதுகாப்பு முகாமுக்கு, சாலை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனை நிறுத்தச் சொல்லி, பூடான் அரசு வலியுறுத்திய போதும், சீனா அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும், அந்த இடத்தை உரிமை கொண்டாடுவதால், இந்திய ராணுவம் தீவிர கவனத்துடன் இந்த விவகாரத்தைக் கையாள தொடங்கியுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
பாலைவனத்தில் பங்கர்கள்.. அணு ஆயுதங்களை டபுளாக்கும் சீனா! சாட்டிலைட் படங்களால் வெளிவந்த உண்மை! -
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications