கிறிஸ்தவ பள்ளி மீது தாக்குதல்- கடும் நடவடிக்கை எடுக்க டெல்லி கமிஷனருக்கு மோடி நேரடி உத்தரவு!
டெல்லி: டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பாசியை நேரில் வரவழைத்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
டெல்லியில் அண்மைக்காலமாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் வசந்த் விஹார் பகுதியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்றின் மீது நேற்று இரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று பார்வையிட்டார்.

டெல்லி முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் அரவிந்த் கேஜ்ரிவாலும் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தேவாலயங்கள் மற்றும் பள்ளிக்கூடம் மீதான தாக்குதலில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் பாசிக்கு பிரதமர் நரேந்திர மோடி சம்மன் அனுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் டெல்லி கமிஷனர் பாசி. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications