தக்காளி வங்கி... நோ ஜிஎஸ்டி - உ.பி காங்கிரஸ் அட்டாக்
தக்காளி விலை உயர்வை கண்டு கொள்ளாத உத்தரபிரதேச பாஜக அரசை கண்டிக்கும் வகையில் பாஜக தக்காளி வங்கியை துவங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.
லக்னோ: மக்களை சட்டினியாக்கி வருகிறது தக்காளி. தக்காளி பெயரை கேட்டாலே தெரித்து ஓடும் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்து லக்னோவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தக்காளி வங்கி தொடங்கி போராடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமேட்டோ என்ற வங்கியை காங்கிரஸ் கட்சியினர் தொடங்கியுள்ளனர்.
இந்த வங்கியில் அரை கிலோ தக்காளியை ஒருவர் முதலீடு செய்து, ஆறு மாதத்திற்கு பிறகு வட்டியுடன் ஒரு கிலோ தக்காளிகளை பெற்றுக்கொள்லாம்.

தக்காளி விலை உயர்வு
தமிழ்நாட்டில் தக்காளி ஒருகிலோ 120 ரூபாய் வரை விற்பனையானது. வட மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. நாடுமுழுவதும் தக்காளியின் திடீர் விலை உயர்வு நடுத்தர மக்களையும், ஏழை மக்களையும் பாதித்துள்ளது.

தக்காளி வங்கி
தக்காளி விலை உயர்வை கண்டிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி, நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தக்காளி டெபாசிட்
இந்த வங்கியில் மக்கள் தங்களிடம் உள்ள தக்காளியை முதலீடு செய்து வைக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது கூடுதல் தக்காளிகள் வட்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி கிடையாது
முதலீடு செய்யும் தக்காளிகளுக்கு பல சலுகைகள் உண்டு என்றும், குறிப்பாக ஜிஎஸ்டி கிடையாது என்றும் அறிவித்துள்ளனர். மக்கள் பலரும் இந்த வங்கியில் தக்காளியை டெபாசிட் செய்து வருகின்றனர்.

அப்போ வெங்காயம் இப்போ தக்காளி
மத்தியிலும், பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்ற போது வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பாஜகவினர் வெங்காயத்தை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு போராடினர். இப்போது காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கி தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications