சர்ச்சை பேச்சால் மீண்டும் பாபா ராம்தேவ் மீது பாய்ந்தது வழக்கு! மத மோதலை தூண்டியதாக புகார்!
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாபா ராம்தேவ் இப்போது மதமோதலை தூண்டியதான வழக்கில் சிக்கி இருக்கிறார்.
ஜெய்ப்பூர்: இஸ்லாம் தீவிரவாத செயல்களை ஊக்கப்படுத்துவதாக பேசிய சர்ச்சைக்குரிய யோகா குரு பாபா ராம்தேவ் மீது ராஜஸ்தான் மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் யோகா குரு பாபா ராம்தேவ்.

யோகா குரு பாபா ராம்தேவ் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். தீவிர இந்துத்துவா கொள்கைகளை பேசக் கூடியவர்.
அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் இந்து மடாதிபதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் ராம்தேவ் பேசுகையில், இந்துமதம் மட்டுமே நல்லதை செய்கிறது. இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துகிறது. பெண்களை இஸ்லாமும் கிறிஸ்தவமும் கட்டாய மதமாற்றம் செய்கிறது என்றெல்லாம் பேசியிருந்தார்.
ராம்தேவின் இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத உணர்வுகளை புண்படுத்தி இரு பிரிவினரிடையே மோதலைத் தூண்டும் விதமாக பேசியதாக பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேசிய ராம்தேவ், பெண்கள் புடவையில் அழகாக இருக்கின்றனர்; பெண்கள் சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள், என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கின்றனர் என கூறியிருந்தார். இதனால் மகளிர் ஆணையம், ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
உத்திர பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், சல்மான் கான் போதைப்பொருள் உட்கொள்கிறார், அமீர்கான் பற்றி எனக்குத் தெரியாது. ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி இருக்கிறார். நடிகைகளைப் பற்றி கடவுளுக்குதான் தெரியும் என பேசி சர்ச்சையில் சிக்கினார்.
கொரோனா காலத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பின்னர் ராம்தேவ் நடத்திவரும் பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து என்ற மருந்துக்கு மத்திய அரசும் தடை விதித்தது. இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துகளை வெளிப்படுத்தி விமர்சனங்களை எதிர்கொள்பவர் ராம்தேவ். தற்போது மத மோதல்களைத் தூண்டும் வகையிலான பேச்சுக்காக வழக்கில் சிக்கி இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications