டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை சீரழித்துக் கொன்ற 4 பேருக்கும் தூக்கு உறுதி
டெல்லி: கடந்த 2012ம் ஆண்டில் டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவியை கொடூரமாக பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு பேருந்தில் இருந்து கீழே வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29ம் தேதி உயிர் இழந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியை சீரழித்து, தாக்கிய மைனர் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் பேருந்து ஓட்டுனரான ராம் சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மைனரை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தது.
மேலும் முகேஷ்(26), அக்ஷய் தாகூர்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உறுதிபடுத்தக் கோரி நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் மாணவியை சீரழித்து, கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்ப்டடுள்ள 4 பேரின் தூக்கு தண்டனையையும் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. மேலும் தண்டனையைக் குறைக்கக் கோரிய குற்றவாளிகளின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக குற்றவாளிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications