சசிகலா ஜெ. சமாதியில் ஓங்கி அடித்தார்.. ஈபிஎஸ் யார் கையில் அடித்து சத்தியம் செய்தார் தெரியுமா?
எந்த சூழ்நிலையிலும் துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவின் கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு: கட்சிக்குக்கோ, ஆட்சிக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்த சூழ்நிலையிலும் துரோகம் செய்ய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் என்று சிறையில் உள்ள சசிகலா தன்னை காண வந்த டிடிவி தினகரனிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார் சசிகலா. எந்த சூழ்நிலையிலும் சசிகலா, டிடிவி தினகரனுடன் தொடர்பு கிடையாது என்று அமைச்சர்கள் கூறி வரும் நிலையில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்தார்.
அதே நாளில் டிடிவி தினகரனும் தனது குடும்பத்தோடு சித்தி சசிகலாவை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் பற்றியும், கட்சியில் தனக்கு நேரும் அவமானங்களைப் பற்றியும் எடுத்துக்கூறினாராம்.

துரோகம் செய்ய மாட்டார்
அப்போது சசிகலா உறுதியாக ஒரு விசயத்தை டிடிவி தினகரனிடம் சொன்னாராம். அதாவது எந்த சூழ்நிலையிலும் எடப்பாடி பழனிச்சாமி நமக்கு துரோகம் செய்ய மாட்டார். என் கையில் அடித்து சத்தியம் செய்திருக்கிறார் என்று கூறினாராம் சசிகலா.

நெருக்கடி தர வேண்டாம்
இன்னும் 3 மாதங்கள் பொறுத்திருப்போம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அவர்கள் முடிவெடுக்கட்டும். ஆட்சிக்கு எந்த சூழ்நிலையிலும் நெருக்கடி தரவேண்டாம் என்றும் டிடிவி தினகரனுக்கு அட்வைஸ் செய்தாராம் சசிகலா.

ஆதரவு தரலாம்
ஆட்சியை எந்த நெருக்கடியும் இன்றி நடத்தினால்தான் நமக்கும் நல்லது. அதேபோல கட்சியை முன் வைத்து குடும்பத்தினர் மோதிக்கொள்ள வேண்டாம் என்றும் சசிகலா கூறியுள்ளாராம்.

பொதுக்கூட்டம் வேண்டாம்
ஆதரவாளர்களை வைத்து பொதுக்கூட்டமோ, ஆட்சிக்கு எதிராக பேசுவதோ வேண்டாம் என்றும் கூறினாராம் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி பற்றி சசிகலா நம்பிக்கையோடு கூறியுள்ளதால் தினகரனும் நம்பிக்கையோடு வந்திருக்கிறாராம். இப்போதய சூழ்நிலையில் அரசுக்கு எதிராக எந்த நிலைப்பாடும் எடுப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்.

எதுவும் பேசாத எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் பேசினாலும் இதுவரைக்கும் சசிகலா, தினகரனுக்கு எதிராக இதுவரை எந்த கருத்தையும் கூறியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. ஆனாலும் தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ளவதற்காக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications