திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: சென்னையில் இருந்து சென்ற குடை
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா தொடக்க நாளான நேற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடக் கொடியுடன் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் உலா வந்தனர்.

கருடக்கொடி ஏற்றம்
பின்னர் உற்சவ மூர்த்திகள் மற்றும் சுவாமியின் சேனாதிபதியான விஸ்வகேசவர் முன்னிலையில், வேத மந்திரங்கள் முழங்க மாலை 5.36 - 6 மணி இடையே பிரம்மோற்சவ கருடக் கொடி, தங்கக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
சந்திரபாபு நாயுடு வஸ்திரம்
பிரம்மோற்சவ விழா தொடக்க நாளான நேற்று இரவு, ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மனைவி புவனேஸ்வரியுடன் பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார்.
பெரிய சேஷ வாகனம்
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் இரவு ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன சேவையின் முன்பு, யானை, குதிரை,காளை போன்ற பரிவட்டங்கள் சென்றன. பின்னர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.
சிறிய சேஷ வாகனம்
பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, சனிக்கிழமை காலை 9 மணியளவில் சிறிய சேஷ வாகன சேவையும், இரவு 9 மணியளவில் அன்ன வாகன சேவையும் நடைபெற உள்ளது.
திருக்குடை ஊர்வலம்
இதனிடையே சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது.
இதனையொட்டி சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பின்னர் திருக்குடைகள் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பக்தர்கள் பெருமாள் பாடல்கள் பாடியவாறும், பக்தி கோஷங்கள் முழங்க சென்றனர்.
கவுனி தாண்டிய குடை
திருக்குடைகள் என்.எஸ்.சி. போஸ்ரோடு, கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக பைராகி மடம் சென்று அங்கிருந்து வ.உ.சி. சாலை வழியாக மாலையில் கவுனி தாண்டியது. பின்னர் அயனாவரம், பெரம்பூர், அகரம் ஜங்ஷன், திரு.வி.க. நகர் வழியாக வில்லிவாக்கம் தாமோதர பெருமாள் கோவிலை இரவு அடைந்தது.
திருப்பதி செல்லும் குடை
27ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு பாடி, முகப்பேர், சந்தான சீனிவாச பெருமாள் கோவில், அம்பத்தூர் முருகன் கோவில் திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில் வழியாக ஆவடி காமராஜர் நகர் பெருமாள் கோவிலை இரவு அடைகிறது. 29-ஆம் தேதி வேன் மூலம் திருப்பதியை அடைந்து ஏழுமலயானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. திருக்குடைகள் செல்லும் வழி நெடுகிலும் பெண்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் பழம் உடைத்தும் வழிபட்டனர்.
கருடசேவை தினத்தில்
செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகனமான கருட சேவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் வாகன மண்டபம் அருகே தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டுள்ளன. ரூ. 300 சிறப்பு கட்டண டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் பிரம்மோற்சவ விழாவின் போது தரிசனத்திற்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. சுப்ரபாத சேவை தவிர அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications