தீவிரவாதிகளுக்கு மட்டுமே தூக்கு- எஞ்சிய வழக்கில் தூக்கு வேண்டாம்- சட்ட ஆணையம் பரிந்துரை!
டெல்லி: இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதற்கு முதல் கட்டமாக தீவிரவாதிகளுக்கு மட்டுமே தூக்கு தண்டனையை நிறவேற்றலாம்; இதர வழக்குகளில் தூக்கு தண்டனை விதிக்க கூடாது என சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளது.
இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் நீண்டகால கோரிக்கை. இதையடுத்து இதுபற்றி ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சட்ட ஆணையத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

மாநில அரசுகள், சட்ட நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறையினரிடம் இது தொடர்பாக சட்ட ஆணையம் கருத்துக்கள் கேட்டது. அதன் அடிப்படையில் அறிக்கை ஒன்றை சட்ட ஆணையம் தயாரித்துள்ளது.
இந்த அறிக்கை அடுத்த வாரம் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதில், இந்தியாவில் பொதுவாக தூக்கு தண்டனை வேண்டாம். மிகப் பெரிய அளவில் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு மட்டும் தூக்குதண்டனையை நிறைவேற்றலாம் எனக் கூறப்பட்டுள்ளதாம்.
இந்த பரிந்துரையில் அடிப்படையில் முடிவுகள் எடுத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. உலகம் முழுவதும் 98 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் இந்தியாவையும் இடம் பெற செய்யும் முயற்சியின் முதல் கட்டம் இது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications