இனிமேல் பாரீஸிலும் இந்திய மாம்பழத்தை சுவைக்கலாம்... தடையை விலக்கியது ஐரோப்பா!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த மாம்பழங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் விதித்திருந்த இறக்குமதி தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவந்த அல்போன்சா வகை மாம்பழங்களில் புழுக்கள் இருந்ததாக கூறி இவ்வகை மாம்பழங்களுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் தடை விதி்க்கப்பட்டது.

தொடர்ந்து மே மாதம் காய்கறிகள் இறக்குமதிக்கும் தடை விதித்தது. இந்த தடை விதிக்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் பழங்கள் மீதான தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும், காய்கறி மீதான தடை இன்னும் நீடித்து வருவதாகவும் மத்திய வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications