விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது- மத்திய அரசு
ராஜ்கோட்: இந்திய வங்கிகளில் ரூ9,000 கோடி கடனை பெற்றுவிட்டு திருப்பி கட்டாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க நிகழ்ச்சி, குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், வங்கிகளில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திருப்பி செலுத்தாதவர் என விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனையில் பிரிட்டனுடன் இணைந்து சட்ட விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும். விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி, பிரிட்டனிடம் கோருவது மட்டும்தான் ஒரே வழி. ஆனால், இதுதொடர்பாக அந்நாட்டின் நடைமுறைகள் சிக்கல் நிறைந்தவையாக உள்ளன. அவரை இந்தியா அழைத்து வர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரிட்டனின் ஒப்புதல் கிடைத்த பின்னரே, விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் என்றார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications