ஐஎஸ்ஐஎஸ்ஸில் இணைந்த மலையாள மாஜி பத்திரிக்கையாளர்
திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே மத்திய உளவுத்துறை, கேரள உள்துறை அமைச்சகத்திற்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளது. இது சமீபத்தில் டெல்லியில் டிஜிபி அளித்த பேட்டியில் உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துள்ள முன்னாள் பத்திரிகையாளர் பாலக்காட்டில் இயங்கி வந்த மலையாள செய்திதாளில் பணி புரிந்து வந்தவர். தனது பணியின் போது ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் குறித்து தெரிந்து கொண்ட அவர், தீவிரவாதிகளின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டு தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
பத்திரிகையாளராக சொற்ப காலமே பணி புரிந்த இவர், சமூக வலைதளங்கள் மூலமாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளைத் தொடர்பு கொண்டுள்ளார். தீவிரவாதிகளுடனான இவரது தொடர்பைத் துண்டிக்க, குடும்பத்தாரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
இதற்குள்ளாக இவரின் சமூக வலைதள நடவடிக்கைகளின் அடிப்படையில் சந்தேகம் கொண்ட போலீசார், இவரை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தந்தையின் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் தனது வேலையை ராஜினாமா செய்த இவர், அதே பத்திரிகையின் சர்வதேச செய்தியாளராக வளைகுடா நாட்டிற்கு சென்றார். அந்த சமயத்தில் தன் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி சிரியா சென்ற அவர், அங்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்த தகவல், லண்டனில் பிடிபட்ட தீவிரவாதி ஒருவர் மூலம் போலீசாருக்குத் தெரிய வந்தது.
இதன் மூலம், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பேர் இணைந்திருப்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications