கணவனை காரில் அடைத்துவிட்டு, 8 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த காமக் கொடூரன்கள்

மகாராஷ்டிராவில் கணவனை காரில் அடைத்துவிட்டு 8 மாத கர்ப்பிணியை கூட்டு பலாத்காரம் செய்த 4 பேரில் 3 பேர் கைதாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காரில் கணவனை அடைத்துவிட்டு, கர்ப்பிணி மனைவி பலாத்காரம்- வீடியோ

    கோலாப்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவனை காரில் அடைத்து பூட்டிவிட்டு 8 மாத கர்ப்பிணி மனைவியை 4 காமக் கொடூரன்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்கள் ஹோட்டலுக்கு வேலையாட்களைத் தேடி பக்கத்து மாவட்டமான சங்லி மாவட்டத்தில் உள்ள துர்சி பாட்டாவுக்கு காரில் சென்றுள்ளனர்.

    Four person rape pregnant woman in Maharashtra; 3 person arrest

    அங்கே ஒருவன் அந்த தம்பதிகளிடம் ஹோட்டலில் வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறியதோடு ஹோட்டலில் வேலை செய்ய மேலும் இரண்டு பேர் ஆர்வமாக இருகிறார்கள் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளான். அங்கே காரில் சென்றதும் அந்த நபர் தம்பதியரைத் தாக்கியுள்ளான். மேலும், கணவனை காரில் வைத்து பூட்டிய பின், அவருடைய 8 மாத கர்ப்பிணி மனைவியை இழுத்துச் சென்று 4 பேர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அவர் அணிந்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

    இந்த தாக்குதல் தொடர்பாக பாதிக்கப்பட்ட தம்பதிகள் அங்கிருந்த டஸ்கான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களில் 3 பேர்களைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். ஒருவன் மட்டும் தலைமறைவாக உள்ளான்.

    இது குறித்து, டஸ்கான் காவல் நிலைய போலீஸ் அஜய் சிண்ட்கர் கூறுகையில், "பிடிபட்ட 3 இளைஞர்களும் அந்த பெண்ணிற்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. அந்த 3 பேரும் அந்த பெண்ணின் ஹோட்டலில் ஆறு மாதங்கள் வேலை செய்துள்ளனர். மேலும், அந்த பெண் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதோடு, விசாரணையில், அந்த பெண் சொல்ல தகவல்களையும் பிடிபட்டவர்கள் அளித்த வாக்குமூலங்களையும் உறுதி செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

    8 மாத கர்ப்பிணியை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து அம்மாநில பெண்கள் ஆணையம் சங்லி மாவட்ட போலீஸ்டம் அறிக்கை கேட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+