மகா காளி அணையில் 'செஃல்பி'... 3 நர்சிங் மாணவிகள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி
மகாராஷ்டிரா மாநில மகா காளி அணையில் செஃல்பி எடுக்க முயன்ற நர்சிங் மாணவிகள் 3 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாயினர். அவர்களைக் காப்பாற்ற சென்ற மாணவரும் நீரில் மூழ்கி பலியானார்.
நாக்பூர்: 'செஃல்பி' மோகத்தால் நர்சிங் மாணவிகள் 3 பேர் அணையில் மூழ்கி பலியானார்கள். அவர்களைக் காப்பாற்ற முயன்ற மாணவனும் பரிதாபமாக உயிரிழந்தான்.
மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் உள்ள காரன் கானா கிராமத்தில் மகா காளி அணைப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 3 மாணவிகள் இந்த அணைப் பகுதியை சுற்றிப் பார்க்க வந்திருந்தனர்.

அப்போது நீர் நிறைந்த அணைப்பகுதியில் கரையின் ஓரமாக நின்று கொண்டு மாணவிகள் 'செஃல்பி' எடுக்க விரும்பினர். இதனையடுத்து மாணவிகள் 3 பேரும் செஃல்பி எடுத்தனர். அதில் திருப்தி அடையாத அவர்கள், தண்ணீரில் இறங்கி 'செஃல்பி' எடுத்தனர்.
அப்போது எதிர்பாராத வகையில் ஒரு மாணவி கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ந்து போன மற்ற 2 மாணவிகளும் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் துர்திருஷ்டவசமாக 3 பேரும் அணை நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
இதைப் பார்த்த குரவ் குல்ஹானே என்ற 10-ம் வகுப்பு மாணவர், மாணவிகளை காப்பாற்ற அணையில் குதித்தான். ஆனால் அவரால் காப்பாற்ற முடியாமல் தண்ணீரில் தத்தளித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அணையில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் அனைவரையும் பிணமாக தான் மீட்க முடிந்தது. அணையில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications