கொடுமை.. ஓடும் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு.. 12 வயது சிறுமி படுகாயம்.. கேரளாவில் பரபரப்பு சம்பவம்
கண்ணூர்: கண்ணூரில் ஓடும் ரயில் மீது விஷமிகள் கற்களை வீசியதில் 12 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பாரபட்சம் இன்றி விரும்புவது ரயில் பயணங்களை தான். அப்படிப்பட்ட சுவாரசியமான ரயில் பயணங்களை சில விஷம எண்ணங்களை கொண்ட மனிதர்கள் நாசமாக்கி விடுகின்றனர்.
ரயில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலை தடம்புரளச் செய்வது; டிராக்குகளை மாற்றும் கருவிகளை உடைப்பது என இவர்கள் செய்யும் அட்டூழியம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இதுபோன்ற ஒரு பரிதாபமான சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் தனது மனைவி ரஞ்சினி, மகள் கீர்த்தனா (12) ஆகியோருடன் கண்ணூரில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் மங்களூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தார்.
சிறுமி கீர்த்தனா வெளியே வேடிக்கை பார்ப்பதற்காக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில், கண்ணூரின் தாலே சொவ்வா, எடக்காட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்ற போது, திடீரென சிறுமி கீர்த்தனா அலறி துடித்தார். என்னவென்று பார்த்த போது அவரது இடது தலை பகுதியில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.
அப்போதுதான், ரயிலின் மீது விஷமிகள் சிலர் கல் வீசியிருப்பது அங்கிருப்பவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து, ரயிலை சங்கிலி பிடித்து இழுத்து பயணிகள் நிறுத்தினர். பின்னர், ரயில்வே போலீஸார் அங்கு வந்து சிறுமியை தலச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மங்களூர் - திருவனந்தபுரம் மார்க்கத்தில் இதுபோன்று ரயில் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த மாதம் 30-ம் தேதி மங்களூரின் உலால் ரயில் நிலையம் அருகே வந்த ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை எச்சரித்து ரயில்வே போலீஸார் அனுப்பி வைத்தனர்.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications