எங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் பிரிக்கிறீங்க? திரிணாமுல், ஆம் ஆத்மி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துவிடும் என்று அம்மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கருத்து கணிப்புகள்
கோவாவில் பாஜக ஆட்சியில் உள்ளது. கோவா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே கூறி வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்றும் இக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் அளவுக்கு இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன சில கருத்து கணிப்புகள்.

மெகா கூட்டணி உருவாகுமா?
மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ், கோவாவில் களம் காண்கிறது. ஆனால் கோவா தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. இன்னொரு பக்கம், மகாராஷ்டிரா போல பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் ஒன்று திரண்டு மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.

திரிணாமுல், ஆம் ஆத்மி மீது சாடல்
இந்த நிலையில் கோவா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை விமர்சித்துள்ளார். ப. சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவு: கோவாவில் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் போட்டி. கோவா தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் பிரிக்கும் என்பது என் கணிப்பு. இதனை அரவிந்த் கெஜ்ரிவால் உறுதிப்படுத்தி உள்ளார்.

காங்-க்கு வாக்களிக்க அப்பீல்
கோவாவில் 10 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டி மாற்றம் வேண்டும் என விரும்புகின்றனர். அப்படி மாற்றத்தை விரும்புகிறவர்கள் காங்கிரஸுக்குதான் வாக்களிப்பர். ஆட்சி தொடர வேண்டும் என விரும்புகிறவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பர். கோவாவில் ஆட்சி மாற்றம் தேவையா? இல்லையா? என்கிற கேள்வி வாக்காளர்கள் முன்னர் தெளிவாக வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஆட்சி மாற்றத்துக்காக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
புதுச்சேரி தேர்தல்.. முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு.. முடிவுக்கு வருமா தொகுதி பங்கீடு? -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications