கிரீன்பீஸ் ஆர்வலரை ஏன் விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்?
டெல்லி: கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர் பிரியா பிள்ளையை தேடப்படும் நபராக அறிவித்து உளவுத் துறை கடந்த 9ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தான் பிரியா லண்டன் செல்லும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

தேடப்படும் நபர் ஏன்?
தேசிய பாதுகாப்பு கேள்விக் குறையாகும்போது, ஒரு நபருக்கு எதிராக தகவல் கிடைக்கும்போது அவரை உளவுத் துறை தேடப்படும் நபராக அறிவிக்கும். உளவுத் துறையால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் உள்ள கிரீன்பீஸ் தான் பிரியாவுக்கு விமான டிக்கெட் வாங்கிக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பல முக்கிய திட்டங்களை தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது என்று உளவுத்துறை கடந்த ஆண்டு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை வைத்து இந்தியாவில் உள்ள கிரீன்பீஸ் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.
I was offloaded,not allowed to leave the country : Priya Pillai,Green Peace activist pic.twitter.com/8sVF5TEJ2v
— ANI (@ANI_news) January 12, 2015 மஹான் நிலக்கரி சுரங்க விவகாரம்
மஹான் நிலக்கரி சுரங்க விவகாரம் பற்றியும் உளவுத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த கிரீன்பீஸ் அமைப்பினர் வெளிநாட்டு பணத்தில் போராட்டம் நடத்தினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹான் நிலக்கரி சுரங்களில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி இங்கிலாந்து எம்.பி.க்களுடன் பேச, கூட்டத்தில் உரை நிகழ்த்த பிரியா பிள்ளை லண்டன் கிளம்பினார்.
விதிமுறைகள் மாறிவிட்டது
ஒருவரை தேடப்படும் நபராக அறிவித்து சுற்றறிக்கை விட உளவுத் துறைக்கு அதிகாரம் உள்ளதா என்று விவாதிக்கப்பட்டது. அத்தகைய சுற்றறிக்கையை உள்துறை அமமைச்சகத்தின் ஒப்புதலோடு தான் வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் 2010ம் ஆண்டு விதிகள் மாற்றப்பட்டு அத்தகைய சுற்றறிக்கையை வெளியிட உளவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. உளவுத் துறையில் கூடுதல் இயக்குனர் பதவிக்கு இணையான நபருக்கு தேடப்படும் சுற்றறிக்கை விட அதிகாரம் உள்ளது.
யாரையும் கைது செய்யும் அதிகாரம் உளவுத் துறைக்கு இல்லை. அது விமான நிலைய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினால் சம்பந்தப்பட்ட நபரை அவர்கள் விமானத்தில் இருந்து இறக்கிவிடுவார்கள். அதன் பிறகு அதிகாரிகள் தான் அந்த நபரை கைது செய்ய வேண்டும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications