Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குஜராத் பாலம் அறுந்தது விபத்தில்ல.. சதி! பின்னணியில் “ஒரு” கட்சி.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பகீர்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், இது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதி என்றும் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 141 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது புகழ்பெற்ற தொங்கு பாலம். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த பழமையான கேபிள் பாலத்தின் புணரமைப்பு பணிகள் அண்மையில் நடைபெற்றன.

சமீபத்தில் இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டது. அதன் பிறகு குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக இந்த மோர்பி பாலம் உருவெடுத்தது.

 மக்கள் கூட்டம்

மக்கள் கூட்டம்

அண்மையில் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்களில் இந்த பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பாலத்திற்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டு இருந்தனர்.

 அறுந்த பாலம்

அறுந்த பாலம்

235 மீட்டர் நீளம், 1.25 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தில் ஒரே நேரத்தில் நிற்பதற்கு குறிப்பிட்ட அளவிலேயே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான மக்கள் கூட்டம் திரண்டதால் எடை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தால் பாலம் எடை தாங்காமல் அறுந்து விழவே மக்கள் ஆற்றில் விழுந்தனர்.

 135 பேர் மரணம்

135 பேர் மரணம்

பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தவர்களில் சிலர் நீச்சல் அடித்து தப்பி வந்துவிட்டனர். ஆனாலும் குழந்தைகள், பெண்கள் உட்பட 135 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிர்ச்சியை இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

 அக்னி ஹோத்ரி ட்வீட்

அக்னி ஹோத்ரி ட்வீட்

இந்த நிலையில் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ட்விட்டரில் விபத்துக்கான காரணம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "மோர்பி பால விபத்து என்பது அர்பன் நக்சல்களில் திட்டமிட்ட சதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள், ரயில் தண்டவாளங்கள், பாலங்களை தகர்க்கிறார்கள். அர்பன் நக்சல்களுக்கு அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாதுகாப்பு வழங்குகிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்." என்று பதிவிட்டுள்ளார்.

 காரணம் என்ன?

காரணம் என்ன?

இவர் இவ்வாறு கூறியுள்ள நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாகவும் முறையான பராமரிப்பு இல்லாததாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. கடிகார நிறுவனத்திடம் இதன் பராமரிப்பு பணிகளை வழங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக டிக்கெட்டுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமான அளவு பாலத்தில் மக்களை அனுமதித்ததால் எடை தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.

 கைதும் உச்சநீதிமன்ற உத்தரவும்

கைதும் உச்சநீதிமன்ற உத்தரவும்

பாலம் விபத்தை தொடர்ந்து காவல்துறை 9 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகிறது. இது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என வழக்கறிஞர் விஷால் திவாரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரணை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மனுவை நவம்பர் 14 ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+