உயிருக்கு போராடும் இந்த சிறுமிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாமே!
பெங்களூர்: குமாரி சயிதா நபிகா, 8 வயதாகும் சிறுமி. கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்தை சேர்ந்த இவர், அவரின் வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான கட்டத்தை இப்போது தாண்டிக்கொண்டுள்ளார். இவருக்கு இருப்பது நூதனமான ஒரு உடல்நலக்குறைபாடு. கோர்பசல்ஸ் (corpuscles) தன்மை உடலில் குறைவாக உள்ளதால், அவ்வப்போது உடலில் புண்கள் தோன்றி, உடல் அரிப்புக்கு காரணமாகிறது. இது பெரும் வலியை கொடுக்கிறது.
சில நேரங்களில் உடலில் அரிப்பு அதிகரிக்கும்போது, அதை நிறுத்தவே முடியாத நிலைக்கு போகிறார். இதனால் உடலில் கொப்புளங்கள் தோன்றி, ரத்தம் வழிகிறது. அவ்வப்போது ரத்த வாந்தியும் எடுக்கிறாராம். சயிதா அடையும் வேதனையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. சில நேரங்களில் அவர் கண்ணீர் விட்டு கதறி அழும்போது பார்ப்போர் இதயமே வெடித்துவிடும். இதையெல்லாம் பார்க்கும் சயிதாவின் பெற்றோரும், உறவினர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதபடி உள்ளனர்.

நாராயண ஹிருதாலா ஹெல்த் சிட்டி குழந்தைகள் நல ஹீமோடோலஜி, ஆன்கோலஜி மற்றும் எழும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணர் டாக்டர். சுனில் பட் இதுபற்றி கூறுகையில், சயிதா, ரெசப்லட் அக்யூட் லிம்போப்ளாஸ்டிக் லெயுகெமியா (Resapled Acute Lymphoblastic Leukemia) என்ற வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

சயிதாவுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்த்த டாக்டர்கள் அவவருக்கு எழும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள சுமார் ரூ.30 லட்சம் வரை செலாவகும். சயிதாவின் குடும்பத்தினருக்கு இந்த தொகை மிக அதிகமாகும். ஏனெனில் அவரின் தந்தை கூலி வேலை செய்கிறார். சயிதாவின் சிகிச்சைக்காக அவரின் குடும்பத்தார் இதுவரை தங்கள் சக்தியையும் மீறி ரூ.10 லட்சம் வரை செலவிட்டுள்ளனர்.

சயிதாவை இந்த நிலையில் பார்க்க கவலையளிக்கிறது. சயிதாவுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம். எவ்வளவு சிறு தொகையாக இருந்தாலும் அது பாராட்டத்தக்கதே. இந்த அறுவை சிகிச்சை சயிதாவுக்கு வலியில்லாத, ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கும் என்று நம்புகிறோம். இவருக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும், வருமான வரி சட்டத்தின் 80G பிரிவின்கீழ் விலக்கு பெற்றவை. 80G ரசீது, Nanhi Pari பவுண்டேசனால் கொடுக்கப்படும்.
சயிதாவுக்கு உதவி செய்ய விரும்புவோர், இதை கிளிக் செய்யவும்
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications