Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கு தீயணைப்பு பயிற்சி கொடுத்துள்ளார்கள் தெரியுமா..? சர்ச்சையில் கேரள தீயணைப்பு படையினர்

Subscribe to Oneindia Tamil

கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளித்து தீயணைப்பு படையினர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.

இந்நிலையில் சில நாட்களாக பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுடன் தீயணைப்பு படையினர் இருக்கும் படங்கள் இணையதளங்களில் பரவின.

பாஜக கண்டனம்

பாஜக கண்டனம்

மேலும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பினருக்கு தீயணைப்பு படை அதிகாரிகள் பயிற்சி அளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன இதற்கு பாஜகவின் மாநில தலைவர் கே சுரேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பினராயி விஜயனை விமர்சனம் செய்துள்ளார்.

 சிவப்பு கம்பள வரவேற்பு

சிவப்பு கம்பள வரவேற்பு

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ள அமைப்பினருக்கு கேரள தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பயிற்சி அளித்துள்ளனர். ஜிகாதி சக்திகளை பினராயி விஜயன் அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ‛டேக்' செய்துள்ளார்.

 நடவடிக்கைக்கு பரிந்துரை

நடவடிக்கைக்கு பரிந்துரை

இந்நிலையில் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி தீயணைப்பு படை டிஜிபி சந்தியாவுக்கு கேரள அரசு உத்தரவு பிறப்பித்தது. அதில், ‛‛சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினோம். கோழிக்கோட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கலாசார விழாவுக்கு சென்றபோது தீ தடுப்பு நடவடிக்கை குறித்து விதிகளை மீறி பயிற்சி அளித்துள்ளனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார். இதனால் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது.

போலீஸ்காரர் டிஸ்மிஸ்

போலீஸ்காரர் டிஸ்மிஸ்

முன்னதாக கடந்த மாதம் இடுக்கி மாவட்டத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 150 பேரின் விவரங்களை எஸ்டிபிஐ அமைப்பின் தலைவர்களுக்கு வழங்கியதாக கரிமானூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரர் பிகே அனாஸ் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் தற்போது இந்த பிரச்சனை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+